“உன்ன பத்தி எனக்கு தெரியும்.. நீ ஒன்னும் சொல்ல வேணாம்..” ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பதில் கொடுத்த ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ( Rashmika Mandanna ) விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பல்வேறு தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவர்களுடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் வெளியாகின.

அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மாலத்தீவில் நீச்சல் குளத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் குதூகலமாக இருந்த நடிகை ராஸ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்,’புஷ்பா’ படத்தில் நடித்த ராஷ்மிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளிவந்தன.

அது குறித்து ஐஸ்வர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவீட் செய்துள்ளார் ராஷ்மிகா. அதில், “ஹாய் அன்பே, இப்போதுதான் இது பற்றி பார்த்தேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன்.

இது பற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

உங்கள் ‘பர்ஹானா’ படத்திற்கு எனது சிறப்பான, அன்பான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் பதிவை ரிடுவீட் செய்து ஹாட்டின் எமோஜிகளைப் பறக்கவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.