“ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நெனச்சிட்டோம்..” – சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

மிகச் சின்ன வயதில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து, தற்போது சிவாஜி குடும்பத்தில் மருமகள் ஆகி இருப்பவர் சுஜா வருணி. குழு நடனத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடி அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 

 

ஆரம்பகட்டத்தில் திரையுலகம் பற்றி அவ்வளவாக தெளிவு இல்லாததால் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர், அதன்பின் படிப்படியாக உயர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்தார். 

 

அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர், போட்டியாளர்களுடன் கடுமையாக வெற்றிக்காக போராடினார். வாழ்க்கையில் இதுவரை பிரச்சனைகளும் துன்பங்களை மட்டுமே சந்தித்திருக்கிறேன், இதுவரை ஒரு வெற்றியைக் கூட அனுபவித்ததில்லை என மனம் உடைந்து கூறினார்.

 

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா வருணி. பாதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் பங்குபெற்றார். 

 

பிக்பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்தார். தற்போது சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் சுஜா வருணி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

 

36-வயதான சுஜா 2002-ல் பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.அதன்பின் தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களிலேயே நடித்திருந்தார்.

 

 

பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவுமே படங்களில் தோன்றி வந்தார்.மேலும் வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.

 

 

தமிழில் 2010-ல் வெளியான மிளகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின் பென்சில்,கிடாரி,குசேலன்,சமீபத்தில் வெளியான ஆண் தேவதை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ள சுஜா வருணியை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நினைச்சுட்டோம் என ஷாக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.