“இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..” – நிக்கி கல்ராணியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

சினிமாவில் நடிப்பு, வசனம், சண்டை என பல அம்சங்களும் வேண்டும் ஆனால் இவை அனைத்தையும் தாண்டிய ஒரு அம்சம் என்றால் அது வசீகரம்தான். தமிழ் சினிமாவில் சிலுக்கு முதல் சிம்ரன் வரை கவர்ச்சி காட்சிகளில் நடிக்காதவர்கள் இல்லை.

 

சுமாரான படங்கள் கூட கவர்ச்சி தரும் ஹீரோயின்களால் சூப்பராக ஓடியுள்ளது. அப்படிப்பட்ட கவர்ச்சி நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமில்லை. அந்த வரிசையில் நிக்கி கல்ராணி அடங்குவார். 

 

இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

அதன் பின் தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார் நிக்கி கல்ராணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

 

அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்க உள்ளார்.

 

பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் விதமாக பாவடையை பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என்று கலாய்த்து வருகிறார்கள்.