பிரபல சின்னத்திரை நடிகை ஸ்யமந்தா கிரண். தமிழில் பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பிரபலாமானவர். தவிர சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள்.
நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண் அதில் இருந்து திடீரென விலகினார்.
நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் , காதலர் தினத்தை ஒட்டி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பொதுவாக தனக்கு காதலர் தினத்தின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை எனக் கூறும் அவர், காதல் எல்லோர் வாழ்விலும் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்கிறார்.காதல் மீது வெறுப்பு இருந்ததே இல்லை.
இதுவரை காதலில் விழுந்ததில்லை எனக் கூறும் சியமந்தா, ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும் போது, நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்து விட்டால் ஓகே சொல்லிவிடுவேன் என்றும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சியமந்தாவா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.
Leave a Reply