“ஒரே நேரத்தில் 2 பேருடன் உறவு..” பெற்ற தாயை செருப்பால் அடித்த மில்க் நடிகை..! – அதிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட்..!

ஒரு காலத்தில் படுமோசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த மில்க் நடிகை தன்னுடைய வாழ்க்கை மீது தனக்கே ஒரு வெறுப்பு வருவதை உணர்ந்து இருக்கிறார்.

பொதுவாக சில நடிகைகள் தங்களுடைய இளமைக்காலத்தில் வாலிப எண்ணம், பண ஆசை காரணமாக தங்களுடைய கட்டழகு, கவர்ச்சி இவற்றையெல்லாம் வீணாக்காமல் முறையாக செலவு செய்தால் முதலீடு செய்தால்.. கோடிகளில் புரள முடியும் என்ற ஆசையில் சினிமாவில் இறங்கி செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்கிறார்கள்.

அந்த வகையில், பிரபலமாகி கோடிகளையும் சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு ஒரு அருவருப்பான விஷயங்கள் தோன்றும்.

Gossip

அவர்களிடம், அடுத்து என்ன.. என்ற கேள்விக்கு பதிலே கிடைக்காது. இந்த இடத்தில் பலரும் சற்று தடுமாறுவார்கள். சில நடிகைகள் ஆன்மிகம் யோகா என தங்களின் மனதை ஆசுவாசப்படுத்துவார்கள். சில நடிகைகள் சினிமாவே வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். சிலர் மது, போதை வஸ்துக்கள் என தவறான பாதையில் சென்று விடுவார்கள்.

அந்த தடுமாற்றத்தில் தான் மில்க் நடிகை சிக்கி இருக்கிறார். திரைப்படங்களில் மோசமாக நடித்த காரணத்தினால் தன்னுடைய கணவரையே விவாகரத்து செய்துவிட்டு சென்ற மில்க் நடிகை திரைப்படங்களில் வாய்ப்பு இல்லை என்றதும் வெப் சீரிஸ்களில் கதாநாயகர்கள் வில்லன்கள் ஆகியவருடன் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எப்படி இருந்த பொண்ணு.. வெப்சீரிஸில் இப்படி அட்டூழியம் பண்ணுதே.. என்றெல்லாம் பொதுவான சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால், சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த மில்க் நடிகைக்கு இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்ததே அவருடைய அம்மா தான் என்பது ஆரம்பத்தில் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

இப்படியே நகர்ந்து கொண்டிருந்த மில்க் நடிகையின் வாழ்க்கையில் திடீரென உள்ளே நுழைந்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஒரு நபர். அவரை பார்த்த முதல் தடவையே காதல் வயப்பட்டார் நடிகை.

ஒரு பெண்ணாக இருந்தாலும் வம்படியாக சென்று அந்த நபரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். உங்களை பார்த்த நாள் முதல் என்னை நான் இழந்து விட்டேன். எனக்குள் நீங்கள் முழுதாக வந்து விட்டீர்கள். என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார்.

அந்த நடிகரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். யோசித்துப் பார்த்த அவர் நடிகை மில்க் நடிகையின் காதலை ஏற்றுக் கொண்டார். இருவரும் சில மாதங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்த நிலையில் பெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று மில்க் நடிகைக்கு வந்து இருக்கிறது.

Gossip

மிகவும் மோசமான கதைக்களம் கொண்ட வெப் சீரிஸ். கதைப்படி, தன்னுடைய கணவரின் ப்ரமோஷனுக்காகவும், கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காகவும்.. தன்னுடைய கணவர் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தன்னுடைய கணவன் என இருவருடனும் ஒரே அறையில்.. ஒரே நேரத்தில் உறவில் இருப்பது போன்ற சில நிமிட படுக்கையறை காட்சிகள் அந்த வெப்சீரிஸில் இடம் பெற்று இருக்கின்றது.

இதனை கேட்ட மில்க் நடிகை முடியவே முடியாது மறுத்திருக்கிறார். நிச்சயமாக என்னால் இதனை செய்ய முடியாது என கூறி அனுப்பி இருக்கிறார். பல்வேறு நடிகைகள் இந்த சீரியஸில் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் மில்க் நடிகை இப்படியான படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் ஒப்புக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கிறது பிரபல OTT நிறுவனம்.

ஆனால், நடிகை மில்க் நடிகை முன்பு போல கிடையாது.. தன்னுடைய காதலன் கட்டுப்பாட்டில் அவருக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். தொடர்ந்து திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விடும் முடிவில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் மீண்டும் இப்படியான காட்சிகள் கொண்ட வெப் சீரியஸ்கள் வேண்டாம் என தவிர்த்து இருக்கிறார் மில்க் நடிகை. இதனை புரிந்து கொள்ளாத OTT நிறுவனம் மில்க் நடிகையின் அம்மா மூலமாக அவரை தொடர்பு கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், வேறு ஒரு வெப் சீரிஸின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகையிடம் இந்த வெப் சீரிஸில் நடித்தால் மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கிறார்களாம்.  சில நிமிட காட்சிகள் தானே.. சம்மதம் சொல்.. இந்த வெப்சீரிசுடன் நடிப்பதை நிறுத்திக்கொள் என்று கேட்டிருக்கிறார்.

Gossip

இதனால் கடுப்பான நடிகை ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் உறவில் இருப்பது போன்ற காட்சியை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் கேட்டு விடும் என மீண்டும் மறுத்துள்ளார்.

நடிகையின் விவாகரத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவருடைய அம்மாவின் பணத்தாசை என்று கூறலாம். ஏனென்றால் நடிகையின் முதல் படத்திலேயே மாமனாருடன் கள்ளதொடர்பில் இருப்பது மோசமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

அப்போது நடிகையின் வயது வெறும் 19 தான். ஆனால், பணத்தாசை காரணமாக அந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க வைத்திருக்கிறார் அவருடைய அம்மா. இப்படி பணத்தாசையுடன் திரிந்த நடிகையின் அம்மா, திடீரென பிரபல இயக்குனரை காதலித்து கல்யாண வாழ்கையில் செட்டிலாகி விட்ட மகளை பார்த்து வயிறு எறிந்துள்ளார்.

என் மகளின் இளமை வீணாய் போகுதே… கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் இந்நேரம் இத்தனை கோடி வந்திருக்குமே.. என புழுங்கியுள்ளார். எனவே, மீண்டும் தன்னுடைய மகளுக்கு நடிப்பு ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி விட்டு படங்களில் கவர்ச்சியாக நடிக்க வைத்து விவாகரத்து வரை இழுத்து வந்து விட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

Gossip

இந்நிலையில், சமீபத்தில் இரண்டு பேருடன் ஒரே நேரத்தில் உறவில் இருப்பது போல் நடித்தால் என்ன ஆகிவிடப்போகிறது.. இதை நடித்துதான் ஆக வேண்டும் மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறேன் என்கிறார்கள் என்று வற்புறுத்தியுள்ளார் நடிகையின் அம்மா.

கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகை.. பெற்ற தாய் என்றும் பாராமல் படப்பிடிப்பு தளத்தில் பத்து பேருக்கு முன்னிலையில் கதறி அழுதபடி செருப்பால் அடித்திருக்கிறார். சுதாரித்து கொண்ட அம்மா நடிகை உடனடியாக மில்க் நடிகையை தட்டிக் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி கேரளாவனுக்குள் அழைத்து சென்றுள்ளார்.

தன்னுடைய தாயிடம் கோபமாகவும் கடுமையாகவும் நடந்து கொள்ளும் நடிகையை பலரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், செருப்பால் அடிக்கும் அளவுக்கு என்ன விவகாரம்..? என்று விசாரித்த போது தான் இந்த ஒட்டுமொத்த கதையும் வெளியே வந்திருக்கிறது.

*** எல்லாத்துக்கும் பணம் தான் காரணம்..