“ரொம்ப டைட்டா இருக்கு.. வேணாம் விட்ருங்கன்னு கெஞ்சினேன்..” – வற்புறுத்திய இயக்குனர்.. நோ சொன்ன மீனா..!

நடிகை மீனா 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தற்பொழுதும் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாகவே இருக்கிறார்.

நடிகர்கள் அஜித் விஜய் ஆகியோருக்கும் கூட ஜோடி போட்டிருக்கிறார். அதிலும், விஜய்யுடன் சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. பாடல் பயங்கர ட்ரெண்ட் ஆனது.

சமீபத்தில் இவருடைய கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இது நடிகை மீனாவின் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியாக்கியது.

திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் நடிகை மீனா. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னை ஒரு படத்தில் நடிக்க அழைத்தார்.

ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அது என்ன படம்..? எதனால் நடிகை மீனா தவிர்த்தார்..? என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நடிகை மீனா கூறியதாவது, நாட்டாமை திரைப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நான் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தி கேட்டார்கள்.

வெறும் 20 நாள் கால் சீட் கொடுத்தால் போதும் என்று கூறினார்கள். நானும் கதையை கேட்டேன்.. நாட்டாமை திரைப்படத்தில் நடிகை குஷ்பு இருக்கிறார்.. நடிகை சங்கவி இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. என்றெல்லாம் தெரியும்.

இவர்கள் இருவரும் இருக்கும் பொழுது நமக்கு என்ன அங்கு வேலை இருக்கப் போகிறது..? என்று யோசித்தேன். பலரும் கே எஸ் ரவிக்குமாரின் படம் அவர் எதுவும் தாமதம் செய்ய மாட்டார். அவருடைய வேலை கச்சிதமாக இருக்கும். தேவையில்லாத இடையூறுகள் எதுவும் இருக்காது என கூறினார்கள்.

ன்னும் சொல்லப்போனால் கேஎஸ் ரவிக்குமாருடன் நான் முதல் முதலில் நடிக்க இருந்த திரைப்படமே நாட்டாமை திரைப்படம் தான். ஆனால் அந்த நேரத்தில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். எனவே கால் சீட் கொடுக்க முடியாத நிலை… எனவே ரொம்ப டைட்டா இருக்கு… வேணாம் விட்ருங்க.. என கெஞ்சி தான் படத்தில் இருந்து வெளியே வந்தேன்.

அதன் பிறகு முத்து திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தேன்.  கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்.. ஆனால், தற்போது எனக்கு விருப்பமான இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார் தான் முதல் இடத்தில் இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார் நடிகை மீனா.