“ஒரே நேரத்தில் 40 பெண்களுடன் படுக்கையில்..” தன் வாயாலேயே ரகசியம் கூறிய பப்லூ..! ஷீத்தல் பிரிவு..!

கடந்த இரண்டு வாரங்களாக பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது காதலி ஷீத்தல் ஆகியோரின் பிரிவு குறித்து பல்வேறு விவகாரமான செய்திகள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் தன்னுடைய தரப்பு விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய காதலி ஷீத்தல் எந்த ஒரு பதிலையும் கொடுக்காமல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் பப்லு இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் கடந்து இருக்க வேண்டும். ஆனால் வம்படியாக பல்வேறு யூட்யூப் தளங்களில் விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

இதே போலத்தான்  முதன்முறையாக பொதுவெளியில் தன்னுடைய காதலியின் அறிமுகப்படுத்திய பொழுது பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. அப்போதும் அமைதியாக இருக்காமல் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.

இந்த வயசுலயும்.. பொம்பள சோக்கு கேக்குதா.. என்று கேட்டதற்கு.. ஆமா கேக்குதே.. என்று கூறி ரசிகர்களை திகைக்க வைத்தார். 28 வயதில் ஒரு மகனை வைத்துக்கொண்டு.. 23 வயதில் ஒரு இளம் பெண்ணை மனைவியாக்க வேண்டுமா..? என்று பலரும் பப்லுவை விளாசினார்கள்.

இந்நிலையில், பப்லூ தன்னுடைய இரண்டாவது காதலி ஷீத்தலை பிரிந்து இருக்கிறார் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில் இருவருடைய பிரிவு குறித்தும் இணைய பக்கங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. அதில் முக்கியமான கருத்து நடிகர் பப்லுவுக்கு 57 வயது ஆகிறது ஆனால் அவருடைய காதலிக்கு 23 வயது தான் ஆகிறது எனவே அதனுடைய காதலியின் ஷீத்தலை படுக்கையில் திருப்தி படுத்த முடியாமல் தவித்து இருக்கிறார் பப்லூ.

இதனால் கடுப்பான ஷீத்தல் அவரை பிரிந்து விட்டார் என்று இணைய பக்கங்களில் கருத்துக்கள் உலா வந்து கொண்டிருந்தன.

இப்படியான விஷயங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கும் பதில் அளித்திருக்கிறார் பப்லூ. அவர் கூறியதாவது, ஒரே நேரத்தில் 40 பெண்களை என்னால் திருப்தி படுத்த முடியும்.. ஷீத்தல் என்ற ஒரு பெண் எல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது என்பது போல பேசி இருக்கிறார்.

ஒரு சர்ச்சையான விஷயம்.. தன்னை பற்றி தன்னை சுற்றி எழுகிறது என்றால் அதனை அமைதியாக கவனிக்க வேண்டியது கடமை. அந்த கருத்துக்கு ரசிக..ர்கள் எப்படியான மனநிலையில் இருக்கிறார்கள்.. அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களுடைய விளக்கத்தை கொடுக்க வேண்டும்.. அல்லது அமைதியாக இருக்க வேண்டும்.

இதுதான் காலம் காலமாக சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு விஷயம். ஆனால், நடிகர் பப்லு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக பதில் கொடுத்து அந்த விவகாரத்தை இன்னும் வளர்க்க செய்கிறார் என்று தான் பொதுவான இணையவாசிகளின் கருத்தாக இருக்கிறது.

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் இடையே எழுந்த சர்ச்சை தமிழ்நாடு முழுக்க நாரி நசநசத்து போனது.

ஆனால் இந்த விவகாரத்தின் நாயகனாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இடத்திலும் இந்த விவகாரம் குறித்து வாயை திறக்காமல் அமைதியாகவே இருந்தார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று அமைதியாக இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனை சிலர் மீடியாவை பார்த்து பயந்துவிட்டார்.. மீடியாவை சந்திக்க பயப்படுகிறார்.. என எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

ஆனால் அந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பக்குவப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். அதுதான் அமைதியாக இருப்பது.

தற்போது இந்த விவகாரம் மெல்ல மெல்ல அமைதியாகி வருகிறது. ஒரு வேலை இமானின் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கிளம்பி இருந்தால்.. அது தமிழ்நாட்டை தாண்டி இந்தியா உலகம் முழுக்க நாரி இருக்கும்.

ஆனால், சிவகார்த்திகேயன் அதற்கு வழி கொடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். இப்படித்தான் பல பிரபலங்கள் தங்கள் பற்றிய சர்ச்சியான விஷயங்கள் வரும் பொழுது அமைதி காத்து வருகின்றனர்.

நிலமை இப்படியிருக்க, பப்லூ பிரித்விராஜ் நடிகர் சிவகார்த்திகேயனை விடவும் வயதில் மூத்தவர்.. மீடியாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? எப்படி கையாள வேண்டும் ரசிகர்களின் கோபத்தை எப்படி கையாள வேண்டும்…? என்று எதுவும் தெரியாமல்… நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல பேசிக் கொண்டிருப்பது தான் இவரை சுற்றி தொடர்ந்து இப்படியான பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

இதுதான் ஷீத்தல் பப்லூவை பிரிந்து செல்வதற்கும் காரணமாக இருக்கும் என இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.