“அடேய்.. பேதியில போவான்..” பாலியல் வழக்கில் கைதான நடிகர்.. வெளியே எடுக்க புஷ்பா படக்குழு செய்த வேலை..!

புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நண்பராக நடித்திருந்தவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி டிசம்பர் 6ஆம் தேதி இவர் ஹைதராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமில்லாமல் மிரட்டியதன் காரணமாக அந்த பெண் தவறான முடிவை எடுத்து கொண்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் ஜெகதீஷ் பிரதாப் பண்டரி.

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் இவரை படப்பிடிப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் செலவு செய்து அவரை பிணையில் எடுத்து வந்திருக்கிறது புஷ்பா படக்குழு.

அல்லு அர்ஜுன் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்போது இவர் இல்லை என்றால் படப்பிடிப்பிற்காக செலவு செய்த அனைத்து தொகையும் வீணாகிவிடும் என்ற காரணத்தினால் இந்த 20 லட்சம் ரூபாயை பிணைய தொகையாக கொடுத்து பிரதாப் பண்டரியை ஜாமினில் கொண்டு வந்திருக்கிறது புஷ்பா படக்குழு.

முன்னதாக இவருக்கு பதிலாக இவரை போலவே முகபாவணையில் இருக்கும் வேறு யாராவது ஒருவரை டூப் செய்து நடிக்க வைத்து விடலாம் என்று படக்குழு யோசித்து இருக்கிறது. ஆனால், அது ஒட்டு மொத்த படத்தையும் நாசம் செய்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வீணாய் போய்விடும் மட்டுமில்லாமல் முதல் பாதத்திலிருந்து கதையின் தன்மையை உள்வாங்கி இருக்கக்கூடிய ஒருவரால் தான் இந்த முக்கியமான காட்சியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

எனவே எவ்வளவு செலவானாலும் அவரை தான் அடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டதால் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியை ஜாமினில் எடுத்துக்கொண்டிருக்கிறது படக்குழு.

இவருடைய காட்சிகள் விறுவிறுப்பாக தற்பொழுது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.