“பொது இடத்தில் சினேகாவின் அக்காவிடம் அஜித் செய்த விஷயம்..!” – பல நாள் கழித்து கசிந்த ரகசியம்..!

தமிழ் திரையுலகமே கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக தல அஜித் விளங்குகிறார். இவர் திரையுலகில் எந்த ஒரு பின் புலமும் இல்லாமல் தன் முயற்சியால் உச்சகட்ட நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

காதல் கோட்டை படத்தில் காதல் மன்னனாக திகழ்ந்த இவர் ரெட், பில்லா போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த துணிவு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் சுமார் 220 கோடி வரை வசூலில் சாதனை படைத்தது.

இதனை அடுத்து தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமையும் என்று அனைவரும் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

அஜித் பற்றி அதிகமான தகவல்கள் இணையங்களில் வெளி வருவது சற்று குறைவு தான். எனினும் இவரைப் பற்றி அண்மை பேட்டியில் புன்னகை அரசி சினேகாவின் அக்கா ஒரு கூறி இருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

அந்த பேட்டியில் தல அஜித்தை பற்றி சினேகாவின் அக்கா பேசும் போது அஜித்தை ஜனா படத்தில் நடிக்கும்போது சந்தித்ததாக கூறியிருக்கிறார். மேலும் அப்போது தனது மகன் சின்ன குழந்தை, அவனை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்.

இதனை அடுத்து பத்து வருடம் கழித்து அவரை மால் ஒன்றில் நேரில் பார்த்தேன். எனினும் பெரிய நடிகர் என்பதால் எந்த விதமான தொந்தரவையும் தந்து விடக் கூடாது என்று நினைத்து நான் பேசாமல் ஒதுங்கி நின்றேன்.

ஆனால் என்னை பார்த்த உடனேயே அஜித் எந்தவித தலைக்கணமும் இல்லாமல் எதார்த்தமாக என்னிடம் வந்து என் குடும்பத்தை விசாரித்தது எனக்கு மிகப்பெரிய சங்கடத்தை தந்தது. எவ்வளவு தான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் அஜித் எதையும் மறக்கவில்லை.

நான் அஜித்தை பார்த்தும், பார்க்காது போல் இருந்தேன். ஆனால் அவரோ எதார்த்தமாக என்னிடம் வந்து பேசியதை இன்று வரை என்னால் மறக்க முடியாது.

என்னை பொருத்த வரை அஜித் என்றுமே ஒரு ஜென்டில்மேனாக திகழ்கிறார். இவரது விடாமுயற்சி படமும் வெற்றி படமாக நிச்சயமாக அமையும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தலயினா சும்மாவா? என்பது போன்ற கமெண்டுகளை போட்டு தெறிக்கவிட்டு இருக்கிறார்கள்.