கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வரல – புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கேடு..! – முன்னணி நடிகரை விளாசிய ப்ளு சட்டை மாறன்..!

நடிகர் அஜீத்குமார் தற்போது துபாயில் இருந்து வருகிறார். துபாயில் அவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இடைப்பட்ட நாட்களில் அஜீத்குமார் துபாய் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் 2 முறை விடாமுயற்சி ஷூட்டிங் தடைபட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், அங்குள்ள இயற்கை சீற்றங்கள்தான். கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல் காரணமாக, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே விடாமுயற்சி படப்பிடிப்புக்குழு, டைரக்டர் மகிழ்திருமேனி உள்பட பலரும் திரும்பி சென்னைக்கு வந்துவிட்ட நிலையில், அஜீத்குமார் மட்டும் அவரது மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் துபாயில் இருந்து வருகிறார். நேற்று 3ம் தேதி, அஜீத்குமார் தனது மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில், அஜீத் குமார் ஆட்டம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் அஜீத்குமார் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அதற்கு காரணம், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அஜீத்குமார் நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை.

ஆனால் விஜய், நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சில நிமிடங்கள் கண் கலங்கி விஜயகாந்த் உடல் அருகே நின்றார். ஆனால் அஜீத்குமார் எந்தவிதமான ஒரு வருத்தமும் விஜயகாந்த் மறைவுக்காக தெரிவிக்கவில்லை. ஆனால் துபாயில் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கடுமையான விமர்சித்துள்ள ப்ளு சட்டை மாறன், மற்ற நடிகர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த வராதவர்கள், புத்தாண்டு கொண்டாடுவது வெட்கக்கேடு என்கிற வகையில் மிக கடுமையாக சாடியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.