“ச்சே, இப்படி நடந்துக்குவாருன்னு நெனச்சிக்கூட பாக்கல..” – அஜீத் செயலை பார்த்து முகம் சுளித்த ரசிகர்..!

நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக துபாய்க்கு சில மணி நேர தூரத்தில் பயணிக்க கூடிய அஜர்பைஜானில்தான் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. அதனால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாய் சென்று அங்குள்ள தனது சொந்த வீட்டில் தனது குடும்பத்துடன் நாட்களை கழிக்கிறார் அஜீத்குமார்.

அஜர்பைஜானில் அடிக்கடி கனமழை, பனிப்பொழிவு, சூறாவளி காற்று, மணல் புயல், கடும் குளிர் என அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் விடாமுயற்சி படப்பிடிப்பை சற்று போராட்டத்துடன் படக்குழு நடத்தி வருகிறது. இதுவரை 2 முறை மணல் புயல், சூறாவளி காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்காமல் தற்காலிகமாக ரத்து செய்யபப்ட்டுள்ளது. மணல் புயல், சூறாவளி காற்றால் தடைபட்டுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பு வரும் 7ம் தேதி முதல் அஜர்பைஜானில் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஏனெனில், மார்ச் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அஜீத்குமார் நடிக்க ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஷாலினி மற்றும் தன் மகன், மகளுடன் துபாயில் தங்கியுள்ள அஜீத்குமார், குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார். கடந்த 3ம் தேதி மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடினார். இதில் ஓட்டல் பெண் உடன் அஜீத் நடனமாடியது பயங்கர வைரலானது.

அதைத்தொடர்ந்து இப்போது மற்றொரு வீடியோவும் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதாவது அஜீத்குமார் சிலருடன் நடந்து செல்கிறார். அப்போது அங்குள்ள இளைஞர் தோற்றத்தில் உள்ள ரசிகர் ஒருவர், செல்போனில் படம் பிடிக்கிறார். அதைப்பார்த்து கோபப்பட்ட அஜீத்குமார், அந்த செல்போனை உடனடியாக வாங்கி, அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டு, திருப்பி தருகிறார். அவரது இந்த அநாகரிகமாக செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.