அந்த காட்சியில் என் ஒரு பக்க மார்பகங்கள் தெரிஞ்சுடுச்சு.. காதலன் கொடுத்த ரியாக்ஷன்..! சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

முன்பெல்லாம் அழகாக இருந்தால் மட்டுமே சினிமாவில், சீரியல்களில் நடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதெல்லாம் இப்போது மலையேறி விட்டது. திறமை இருந்தால் யாராக இருந்தாலும், எந்த துறையிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக, சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லாசெல்லஸ்சை சொல்லலாம்.

கருப்பு நிறமாக இருந்தாலும், களையான அவரது நடிப்பு பலரையும் அவரது ரசிகர்களாக்கி இருக்கிறது. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் அவருக்கு பட வாய்ப்புகள் சிலவும் வந்ததாக கூறப்படுகிறது. எனினும் நடிகையான பின்பு ஒரு பெண் சந்திக்கும் சிரமங்களை, போராட்டங்களை அவரும் சந்தித்து இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணில் இதுபற்றி அவரே வெளிப்படையாக அதுபற்றி கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், ஒரு ஷாட்ல நான் கை தூக்கி கிளாப் பண்ற மாதிரி சீன் இருந்துச்சு. அப்படி கை தூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட ஒரு பக்க உடம்பு கொஞ்சம் தெரிஞ்சுது. அந்த சீன்ல என்னோட மார்பகங்கள் தெரிஞ்சிடுச்சு. இதை சொல்றதுல ஒண்ணும் பிரச்னை இல்லே.

அதை குளோசப்ல கிரீன் ஷாட் எடுத்து, போட்டோ போட்டு அசிங்க, அசிங்கமா கமெண்ட் பண்ணியிருந்தாங்க.அதுக்கு கீழ நிறைய போட்டிருந்தாங்க. நான் எல்லாத்தையும் போய் பார்த்தேன். கமெண்ட் எல்லாம் பார்த்தேன். ரொம்ப வக்கிரமா இருந்துச்சு, அதை என்னை விரும்பும் ஆகாஷிடம் காட்டிய போது, அதை பார்த்துவிட்டு, எதுவுமே கண்டுக்கவில்லை. அப்படியா என கேட்டுவிட்டு அதோடு விட்டுவிட்டார் என்று அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

பெண் என்பவள் நடிகையாக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும், துப்புரவு தொழிலாளியாக இருந்தாலும், இல்லத்தரசியாக இருந்தாலும் பெண் என்பவள் சக மனுஷி என்ற பார்வை மட்டுமே இங்கு பிரதானமாக இருக்க வேண்டும். ஆனால், நடிகை என்றாலே அவர்களை இழிவாக பார்க்கும் ஒரு நிலைதான் இன்றும் தொடர்கிறது என்பதையே கேப்ரில்லா செல்லஸ் கூறிய இந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.