“பொட்டுத்துணி இல்லாம அங்க இருந்து..” நடிகையை கழுவி ஊத்தும் ராதா ரவி..!

நடிகர் ராதா ரவி சமீபத்தில் சின்னத்திரை சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் நம்ம ஊர் நாடக நடிகர்கள் சீரியலில் நடித்தாள் நீங்கள் படமாக்க கூடிய காட்சிகள் சீக்கிரம் முடிவடையும். உங்களுடைய படப்பிடிப்பு நாட்கள் குறையும். இதனால் லட்சக்கணக்கில் செலவை மிச்சப்படுத்தலாம்.

ஆனால், எங்கிருந்துதான் இந்த வடநாட்டிலிருந்து ஆளை பிடித்து வருகிறீர்கள் என்று தெரியவில்லை. அப்படி வருபவர்கள் பொட்டு துணி இல்லாமல் வருகிறார்கள். அதாவது நம்ம ஊர் துணி என்று அவர்களிடம் ஒன்றும் இல்லை.

அவர்கள் ஊரில் உடுத்தக்கூடிய ஆடையோடு வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆடையை கொடுத்து.. அணிவித்து,.. அவர்களை நம்ம ஊரு பொண்ணு போல மாற்றி.. தமிழும் அவர்களுக்கு ஒழுங்கா வராது.. அவர்களுக்கு உதடு அசைவு வேற மாதிரி இருக்கும்.. நம்மளுடைய உதடு அசைவு வேற மாதிரி இருக்கும்.. இதெல்லாம் எதற்கு செய்கிறீர்கள்..?

இதனால் உங்களுடைய படப்பிடிப்பு நாட்களும் அதிகமாகிறது. எதற்காக, வட இந்திய நடிகைகளை கொண்டு வந்து இங்கே நடிக்க வைக்கிறார்கள்..? என்ற காரணமும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் நடிகைகளே இல்லையா..? போன்ற கேள்விகள் எழுகிறது. எனவே தமிழ் நடிகைகளுக்கு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஹிந்தியும் தமிழும் எந்த காலத்திலும் ஒத்து வராது.

அதை நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அரசியல் சார்ந்து எடுத்துக் கொள்ளலாம்.. சினிமா சார்ந்தும் எடுத்துக் கொள்ளலாம்.. நான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது சட்டசபையிலேயே இதை சொல்லி இருக்கிறேன்.

இந்தியம் தமிழும் ஒத்து வரவே வராது.. எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் நான் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்.. நல்ல வேலை எனக்கு ஹிந்தி தெரியவில்லை.. அதாவது படங்களில் வில்லனாக நடித்து ஐஸ்வர்யா ராய்யை கெடுத்திருப்பேன் என சொன்னேன்.

எனவே தமிழ் சீரியல்களில் தமிழ் நாடக நடிகர்களுக்கு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.