இதை குடி.. இல்லானா இங்கயே நில்லு.. 23 வருஷம் நடந்த கொடுமை..! – கொட்டி தீர்த்த நடிகை ஸ்ருத்திகா..!

விஜய் டிவியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரமாண்ட முறையில் மக்கள் மத்தியில் அதிகளவு பார்த்த பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது. இந்த குக் வித் கோமாளி சீசன் 3 கலந்து கொண்ட நடிகை ஸ்ருத்திகா இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஸ்ருத்திகா..

நடிகையாக திகழும் ஸ்ருத்திகா சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் கல்லூரிகள் பட்டப் படிப்பை முடித்தவர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இவர் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை. எனினும் இதனை அடுத்து இவர் ஆல்பம், தித்திக்குதே, நளதமையந்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படத்திலும் நடித்த இவருக்கு மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கு கிடைக்காத காரணத்தால் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டார்.

இவர் தாத்தா தான் தேங்காய் சீனிவாசன் என்பது பல பேருக்கும் தெரியாது. இவர் ஒரு காலகட்டத்தில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர்.

23 வருஷ கொடுமை..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருத்திகா தனக்கு 23 வருஷங்களாக கொடுமை இழைக்கப்பட்டு உள்ளது என்ற விஷயத்தை நாசுக்காக கூறியிருக்கிறார்.

அட.. அப்படி.. அவர் எந்த மாதிரியான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார் என்று பார்க்கும் போது அவர்கள் அம்மா வாரத்தின் ஏழு நாட்களிலும் சர்க்கரை, உப்பு போடாத ஜூஸினை காலை நேரங்களில் குடிக்க கட்டாய படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதை குடித்ததால் நான் செல்வேன் என்று அப்படியே நின்று விடுவாராம்.

இதனை அடுத்து அந்த ஜூசை குடிக்காவிட்டால் எங்கே அம்மா அப்படியே நம்மையும் நிக்க வைத்து, அவரும் நின்று விடுவாரோ என்ற பயத்திலே அந்த ஜூஸை குடித்து இருப்பதாக கூறியவர், இந்த கொடுமை 23 வருஷம் தொடர்ந்து நடந்தது என்று கொட்டி தீர்த்தார்.

அது மட்டுமல்லாமல் தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டிலாக இருக்கும் இவரது குடும்பப் புகைப்படம் அண்மையில் சோசியல் மீடியாவில் வெளி வந்து இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டிருந்தார்கள்.

பழங்களில் இருந்து மட்டும் பெறப்படுவது ஜூஸ் அல்ல. கருப்பு கொண்டை கடலை போல இருக்கும் பருப்பு வகைகள் மற்றும் தானியங்களையும் ஜூஸாக பருகியதன் காரணத்தால் தான் என்றும் ஆரோக்கியத்தோடு இளமையாக இருப்பதாக கூறினார்.

அது மட்டுமல்லாமல் 23 ஆண்டுகளாக அவர் குடித்த ஜூஸ் ஆனது இன்று வரை தன் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது. இதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறிய இவர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் ஜூஸினை அருந்துவது அவசியம் என்பதை உணர்த்தி இருக்கிறார்.

எனவே அனைவரும் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள இதுபோன்ற சத்து மிகு உணவுப் பொருட்களை ஜூஸாக பருகுவது மிகவும் நல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.