காதலித்தேன்.. வாழ்க்கையை இழந்தேன்.. சுந்தரா டிராவல்ஸ் ராதா வேதனை..!

தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுந்தரா டிராவல்ஸ் ராதா இந்த படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் இந்த படமானது விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்றதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.

சுந்தரா டிராவல்ஸ் ராதா..

இதனை அடுத்து சுந்தரா டிராவல்ஸ் ராதா என்று ரசிகர்களோடு அன்போடு அழைக்கப்பட்ட இந்த நடிகை தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் முரளி வடிவேலு உடன் இணைந்து இவர் கலக்கிய கலகலப்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வசூலில் சாதனை புரிந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் கார்த்திக்குடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு கேம் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் 2007ல் சத்தியராஜ்யோடு இணைந்து அடாவடி படத்தில் நடித்த இவர் 2008-இல் காத்தவராயன் படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இவரின் பட வாய்ப்புகள் குறைந்து போக என்ன காரணம் என்ற விஷயத்தை தற்போது ஓபன் ஆக கூறி பலருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டார்.

காதலால் பறிபோன வாழ்க்கை..

இதற்கு காரணம் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த பிறகு சில படங்களில் நடித்த இவர் 2012 ஆம் ஆண்டு ஒருவர் மீது காதல் கொண்டு அவரது அன்புக்காக ஏங்கி இருக்கிறார்.

இந்த காதல் காரணத்தால் தான் தன் திரையுலக வாழ்க்கை மோசமாகி போனது என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் தன்னுடைய தாயார் இவரை சினிமாவில் கவனம் செலுத்தச் சொல்லியும் மாறாக நான் காதல் மயக்கத்தில் இருந்தேன்.

இந்த காதலால் நான் சம்பாதித்த பணம் உள்ளிட்ட பலவற்றை இழந்து விட்டேன். மேலும் சாக்கடைக்குள் காலை வைத்து விட்டேன் என்ற உணர்வு என்னுள் ஏற்பட்டது. அத்தோடு கிட்டத்தட்ட ஒரு பைத்தியமாகவே மாறிவிட்டேன். அந்த சூழ்நிலையில் இருந்து வெளி வரக்கூடிய சக்தியை கடவுள் தான் எனக்கு கொடுத்தார்.

மீண்டு வந்தேன்..

இதனை அடுத்து அம்மா சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல பாசிட்டிவான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கலாம் என்று காத்திருந்தேன். எனினும் திரை வாய்ப்புகள் வந்து சேராத நிலையில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தற்போது இந்த சீரியலில் வில்லியாக நடித்துக் வருகிறார்.

மேலும் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடிப்பதற்கு முன்பே பைரவி என்கிற சீரியல் இவர் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருவதாகவும், காதலித்தேன் அதனால் வாழ்க்கையை இழந்தேன் என்று உருக்கமாக பேட்டியில் பேசியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் காதலால் வாழ்க்கையை பறிகொடுத்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவை உற்சாகப்படுத்தக்கூடிய வகையில் பேசி இருக்கிறார்கள்.

தற்போது இவர் வெளியிட்ட இந்த செய்தியானது பலராலும் பேசப்பட்டு வருவதோடு அவரது வேதனையை குறைக்க கூடிய விதத்தில் பலரும் இவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.