அட தொயரத்த.. “அந்த உறுப்பில் தேன் ஊற்ற வேண்டும் என சொன்னார்..” பல நாள் ரகசியம் உடைத்த கேத்ரீன் தெரேசா..

கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கேத்ரீன் தெரசா பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இவர் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

இதனை அடுத்து அதே ஆண்டில் இவருக்கு மலையாளத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தி திரில்லர் படத்தில் மீரா கதாபாத்திரத்தை அற்புதமாக செய்தார்.

நடிகை கேத்ரீன் தெரசா..

இதனை அடுத்து 2011 முதல் 2013 வரை தெலுங்கு மலையாள, கன்னட படங்களில் நடித்த இவருக்கு 2012ல் காட் பாதர் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசி கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கதாநாயகியாக தனக்கு என்று இடத்தை தமிழ் திரை உலகில் பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் காளி என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. எனினும் தமிழில் அதிக படங்கள் கிடைக்காததனால் அக்கட தேசத்தில் சென்று செட்டிலாக இவர் தெலுங்கில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனை அடுத்து சின்ன கவுண்டர் திரைப்படத்தில் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்ட கதையை விட ஒரு படி சுவாரசியமாக இருக்கக்கூடிய விஷயத்தை தற்போது கேத்ரீன் தெரசா தெரிவித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் அப்படியா!! என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி விட்டது.

அட.. ராமா.. அதுல தேன ஊத்தணுமா..

இதில் எப்படியாவது வசூலை வாரி குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வகைகளை கதாநாயகிகளை வைத்து காட்சிகளை அமைத்து வரும் இயக்குனர்கள் இப்படியெல்லாம் ஒரு காட்சியை வைக்க வேண்டும் என்று நினைப்பார்களா? என்று கேட்க கூடிய வகையில் தெலுங்கு படம் ஒன்று ஒரு காட்சி அமைந்து இருந்ததாக கேத்ரீன் தெரசா கூறியிருக்கிறார்.

மேலும் அது பற்றி அவர் கூறும் போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பாடல் காட்சியில் என்னுடைய தொப்புளில் தேனூற்றி அதன் பழங்களை கொட்டுவது போன்ற காட்சியில் நடிக்க வேண்டும் என்று ஓர் இயக்குனர் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டதும் எனக்கு அந்த இடத்திலேயே குபீர் என சிரிப்பு வந்து விட்டது. அதனை தொடர்ந்து என்ன சார் சொல்றீங்க.. எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று நான் கூறினேன். அதற்கு அந்த இயக்குனர் இது போன்ற காட்சிகளை வைத்தால் படம் பிச்சுகிட்டு ஓடும் என்று கூறினார்.

எனினும் நான் அது போன்ற படு கிளாமரான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறினேன். இதனை அடுத்து இயக்குனர் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு அந்த காட்சியை வேண்டாம் என கூறி விட்டதாக தற்போது பல நாள் ரகசியத்தை உடைத்து விட்டார் கேத்ரீன் தெரசா.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக தெறிக்கவிட்டு இருப்பதோடு அட தொயரத்த அந்த உறுப்புல தேன் ஊற்ற வேண்டும் என சொன்னார்களா? என்று ஆச்சரியத்தோடு பேசி வருகிறார்கள்.