பேரிச்சம் பழத்தை அதில் ஊற வச்சி குடுத்தாரு.. காமெடி நடிகர் அட்டூழியம்.. ரகசியம் உடைத்த ஷகிலா..!

மலையாள படங்களில் அதிக அளவு நடித்து லேடி லால் என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகை ஷகிலாவின் திரைப்படம் மலையாள திரை உலகில் வெளி வந்தால் முன்னணி நடிகர்களை அவர்களது படத்தை ரிலீஸ் செய்ய பயம் கொள்வார்கள்.

அந்த அளவு பெரிய ரசிகர் படையை வைத்திருக்க கூடிய மிகச்சிறந்த நபராக திகழ்கிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரைகளிலும் அதிகளவு தலை காட்டி வருகிறார்.

நடிகை ஷகிலா..

நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்தபடியாக கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட சகிலா ஒரு குண சித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எண்ணமோ கவர்ச்சியின் நடிகை என்ற போர்வையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இதையும் படிங்க: படம் பார்க்க கூட்டி சென்று.. பிட்டு படம் காட்டிய நண்பன்.. அபர்ணா தாஸ் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1990-களில் ஒரு மிகப்பெரிய நடிகையாக ஜொலித்தவர். இவர் படம் வெளி வருகிறது என்றால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்.

பல்வேறு விதமான பேட்டியில் கலந்து கொண்டு இருக்கும் ஷகிலா தற்போது பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டால் இப்படியெல்லாம் அட்டூழியம் செய்வார்களா? என்று கேட்கத் தோன்றும்.

காமெடி நடிகர் செய்த லூட்டி..

அந்த வகையில் இவர் ஒரு முறை படப்பிடிப்பின் போது காமெடி நடிகரோடு இணைந்து நடித்திருக்கிறார். இப்போது அந்த காமெடி நடிகர் படப்பிடிப்பு தளத்தில் பேரிச்சம் பழத்தை இவருக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார்.

நானும் அந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு நடனம் ஆடினேன். நடனமாடி முடிக்கும் போது எனக்கு ஒரு விதமான மயக்கமாகவும், கிறுகிறுப்பாகவும் இருந்தது. இதனை அடுத்து படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து அமர்ந்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது அந்த நடிகர் பேரிச்சம் பழத்தை மதுவில் ஊற வைத்து கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. அன்லிமிடெட் கிளாமரில் அர்ச்சனா மாரியப்பன்..

இப்படிப்பட்ட அட்டூழியத்தை செய்த காமெடி நடிகர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் கவுண்டமணி தான். இவர் நேசம் படத்தில் நட்சத்திர பங்களா பாடலின் படப்பிடிப்பின் போது தான் இந்த கூத்து நடந்தது என்று ஓபனாக கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனை அடுத்து இப்படியெல்லாம் செய்வார்களா? மனசாட்சி இல்லாமல் என்று ரசிகர்கள் புலம்பி வருவதோடு எவ்வளவு இக்கட்டுகளை கடந்து நடிகை ஷகிலா வந்து இருப்பார் என்பதை நினைத்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

கேரள திரைப்பட உலகம் இவரது திரைப்படங்களுக்கு தடை விதித்ததை அடுத்து சென்னையில் வந்து செட்டில் ஆகி இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் தலைகாட்டி வருவதோடு விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் பங்கேற்று இருக்கிறார்.