தோழிகளுடன் முதன் முறையாக அந்த மாதிரி படம் பார்த்த போது.. என் உடம்பெல்லாம்…” வெக்கமின்றி கூறிய தமன்னா..

நடிகர் ரவிகிருஷ்ணா ஜோடியாக கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

அதைத்தொடர்ந்து, தமன்னா நடித்த படம்தான் கல்லூரி. பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படத்தில் கல்லூரி மாணவி சோபிகா கேரக்டரில் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

தமன்னா

அதன்பிறகு விஜயுடன் சுறா, அஜீத் குமாருடன் விஸ்வாசம், கார்த்தியுடன் பையா, தோழா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, தனுஷூடன் படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமன்னா மாறினார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த தமன்னா, ஒரு கட்டத்தில் இந்தி படவுலகம் பக்கம் சென்றார். இந்தியில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால், தாராள கவர்ச்சி காட்ட வேண்டும்.

தாராள கவர்ச்சி

ஏற்கனவே தெலுங்கு படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்த அனுபவத்தால், பாலிவுட்டிலும் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார் தமன்னா. பட வாய்ப்புகள் வந்தன.

இந்தியில் பப்ளி பவுச்சர், பிளான் ஏ, பிளான் பி ஆகிய தமன்னா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தமன்னாவுக்கு கிடைத்தது. தொடர்ந்து ஜீ கர்தா, லாஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களிலும் நடித்தார்.

காவாலா பாட்டு

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவாலா பாட்டுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டார். அவரது லெவலே வேற மாதிரி ஆகிவிட்டது. இந்த பாட்டு அவரது அடையாளமாக போய்விட்டது.

அதனால் நட்சத்திர கலை விழா என்றால், அதில் தமன்னாவின் காவாலா பாட்டும் நடனமும் இடம்பெற வேண்டும் என அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்புகின்றனர்.

படுக்கையறை காட்சியில்

சமீபத்தில் கூட இலங்கையில் நடந்த நட்சத்திர கலை இரவில், தமன்னா ஆடிய காவாலா பாட்டு நடனத்தை பார்த்த பிறகுதான், ரசிகர்களின் நிலமை கட்டுக்கடங்காமல் போய், அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த போது உடன் நடித்த விஜய் வர்மா என்பவருடன் தமன்னா, எல்லை மீறிய நிலையில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். உதட்டு முத்தக்காட்சிகளிலும் ரசிகர்களை மூடு கிளப்பியிருந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகையுடன் ரூமுக்குள் கமல்.. பஞ்சாயத்து பேச வந்து.. முகம் சுளித்த நண்பர்.. கெஞ்சிய முதல் மனைவி வாணி கணபதி..

விஜய் வர்மா

விஜய் வர்மாவுடன் தொடர்ந்து நைட் பார்ட்டிகளில் கலந்துக்கொள்ளும் தமன்னா, அவருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில், நடிகை தமன்னா தனது பள்ளி பருவ வயதில் நடந்த கிளுகிளுப்பான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.

சில்லென ஆகி விட்டது

அதில் தமன்னா கூறுகையில், பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் சேர்ந்து முதன் முறையாக அந்த மாதிரி படம் பார்த்தபோது என் உடம்பெல்லாம் சில்லென ஆகிவிட்டது. உடம்பெல்லாம் மறுத்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

காய்ச்சல் வருவது போல

அதனை நான் மறைக்கவோ.. மறுக்கவோ விரும்பவில்லை… முதன்முறையாக அப்படியான படத்தை பார்த்தபோது எனக்கு காய்ச்சல் வருவது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது.. என வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.

தோழிகளுடன் முதன் முறையாக அந்த மாதிரி படம் பார்த்த போது.. என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது என்று வெக்கமின்றி கூறிய தமன்னா, விஜய் வர்மாவுடன் வெப் சீரிஸில் படுக்கையறை, முத்தக்காட்சிகளில் நடித்தது பற்றி ஒன்றும் கூறவில்லையே, என்றுதான் ரசிகர்கள் புலம்புகின்றனர்.