பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. கடுப்பான ரித்திகா கொடுத்த பதிலடி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை ரித்திகா சிங் ஒரு கலப்பு தற்காப்பு கலைஞராக திகழ்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து வெளியான தகவல்.. உறைந்து போன ரசிகர்கள்..

இவர் ஒரு மிகச்சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் தற்காப்பு கலைஞராக சிறு வயது முதல் கொண்டே இவரது தந்தையின் வழிகாட்டுதலின் படி பயிற்சி பெற்றிருக்கிறார். இதனை அடுத்து 2009 ஆம் ஆண்டு ஆசிய உள் அரங்கு போட்டிகளில் 52 கிலோ இடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக களம் இறங்கிய இவர் சூப்பர் வைட்லிப்டிங்கில் பங்கேற்று இருக்கிறார்.

நடிகை ரித்திகா சிங்..

மேலும் ரித்திகா சிங் சுதா கொக்ரா பிரசாத் இயக்கத்தில் ஆர் மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடித்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து தான் நடிக்கும் படங்களில் இவரது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்றும் சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது.

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி..

மேலும் சமீப காலமாக பல புது முக நடிகைகள் அறிமுகம் ஆனதை அடுத்து இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறலாம். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து தெலுங்கிலும் சில வாய்ப்புகளை பெற்றிருக்கக் கூடிய இவர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுப்பாகி பதில் கொடுத்த ரித்திகா..

பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து தெலுங்கு படத்தில் துல்கர் சல்மானோடு இணைந்து நடித்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கக்கூடிய இவரிடம் அண்மை பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியை அடுத்து மிகவும் கடுப்பாகிவிட்டார்.

இதற்கு காரணம் சமீப காலமாக தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லையா? என்று கேட்கப்பட்ட கேள்வியால் கடுப்பாகி பதில் அளித்த ரித்திகா சிங் என் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன் மற்றபடி எந்த சூழ்நிலையிலும் வேண்டாத படங்களில் நடிக்க மாட்டேன்.

அதுமட்டுமல்லாமல் அது மலையாளம், மராத்தி, ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் கதையும், கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். அந்த படத்தில் இருக்கும் படக்குழு சரியான முறையில் அமைந்து பிறகு சிறப்பான கேரக்டரை தரும் போது அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன் என ரித்திகா சிங் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டையை கழட்டி விட்டு அது தெரிய ரம்யா பாண்டியன் கிளாமர் போஸ்.. அதிருது இன்ஸ்டா..

இதை அடுத்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி ரித்திகா சிங் கொடுத்த பதிலடி பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள். ரித்திகா சிங் சரியான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் என அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.