கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் பிரபல நடிகை பாவனா..

தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்தவர் பாவனா. டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து நடிகர் வினய் உடன் ஜெயம் கொண்டான், நடிகர் ஜீவாவுடன் ராமேஸ்வரம், பரத் உடன் வெயில், நடிகர் ஜெயம் ரவியுடன் தீபாவளி, அஜீத்குமாருடன் அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பாவனா

மலையாளத்தில் நம்மல் என்ற படம் மூலம் அறிமுகமான பாவனா, தொடர்ந்து தன் வசீகரமான அழகாலும், திறமையான நடிப்பாலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் தீபாவளி படத்தில் பாவனா நடிப்பும், நடன காட்சிகளில் அவரது துள்ளலான டான்ஸ்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரியா படத்திலும் பாவனா நடிப்பு சிறப்பாக இருந்தது. இதில் சினேக் பாபுவாக நடித்த செம்பட்டை வடிவேலுவை, பாவனா மிரட்டும் காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுகிறது.

இதற்கிடையே மலையாள நடிகர் திலீப்புக்கும், அவரது மனைவி மஞ்சுவாரியாருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது.

தவறான உறவை

அதற்கு காரணமாக இருந்தவர் நடிகை காவ்யா மாதவன். பாவனா, காவ்யா மாதவன், மஞ்சுவாரியார் என மூவரும் தோழிகள் என்ற நிலையில், நடிகர் திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இருந்த நெருக்கத்தை, தவறான உறவை மஞ்சுவாரியாரிடம் ஆதாரங்களோடு சொன்னவர் தான் பாவனா.

இதையடுத்து அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு

இந்த விவகாரத்தில், நடிகை பாவனா காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா். இது மலையாள திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தப்பட்டது. நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகை காவ்யா மாதவனை போலீசார் விசாரித்தனர்.

இதையும் படியுங்கள்: மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்.. அதுவும் எந்த ஊர்ல தெரியுமா..? உங்கள் கருத்து என்ன..?

இந்த விவகாரத்தில் மிகவும் மனநலம் பாதிக்கப்பட்ட பாவனா, தமிழில் மற்றும் மலையாளத்தில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க மறுத்தார்.

படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் சம்மதிக்கவில்லை. பாவனாவுக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக இந்தியா முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார்

பல ஆண்டுகளுக்கு பிறகு, கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாவனாவை நேரில் அழைத்து தைரியம் சொன்னார். கன்னட படம் ஒன்றிலும் பாவனாவை நடிக்க வைத்தார். தொடர்ந்து கன்னடத்தில் சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இதையும் படியுங்கள்: ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை..அவரு சொன்னதுக்காக.. நடிகை புவனேஸ்வரி வேதனை..!

இப்போது தமிழில் தி டேர் என்ற திரில்லிங் படத்தில் பாவனா நடித்து வருகிறார். இது பாவனாவின் சொந்த அண்ணன் ஜெயதேவ் டைரக்ட் செய்கிற படமாகும். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெள்ளி நிற உடையில்

கடந்த 2018ம் ஆண்டில், நடிகை பாவனா கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது பாத் டப்பில் அமர்ந்தபடி, வெள்ளி நிற உடையில் கிளாமராக இருக்கும் பாவனா, அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் ஷேர் செய்திருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் நடிகை பாவனாவை பார்த்து ஜொள்ளு வடித்தபடி, அந்த புகைப்படங்களை ஷேர் செய்கின்றனர்.