ஏற்கனவே 2 பொண்டாட்டி.. 3 வதாக ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்..!

கடந்த 1980களில் மிக பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

ஸ்ரீபிரியா

அவர்கள் மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் அதிகமாக ஜோடி சேர்ந்தவர் இவராக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அப்போது ஸ்ரீபிரியாவுக்கு, இப்போது ராஷ்மிகா மந்தனாவுக்கு இருக்கிற மாதிரி, தமிழ் சினிமா கிரஷ் இருந்ததாக கூட சொல்லலாம்.

நவரச நாயகன் கார்த்திக்

அதே போல் அந்த காலகட்டத்தில் முன்னணி இளம்நாயகனாக தமிழ் சினிமாவில் அசத்தி கொண்டிருந்தவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். அவர் ஸ்ரீபிரியாவுடன் கடந்த 1984ம் ஆண்டில் நடித்த படம்தான் உறங்காத நினைவுகள். அந்த படத்தில் நடிக்கும் போதே கார்த்திக்கு, ஸ்ரீபிரியா மீது கிரஷ் இருந்துள்ளது. அவரது அழகில் கார்த்திக் சொக்கிப் போய் இருந்துள்ளார்.

காதல்

அதன்பிறகு ஒரு கட்டத்தில், தனது காதலை நேரடியாக ஸ்ரீபிரியாவிடம் நேரடியாகவே சொல்லி விட்டார். அதன்பிறகு சில மாதங்களில் கார்த்திக் மீது, ஸ்ரீபிரியாவுக்கும் விருப்பம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் கண்டிப்பாக நான் உங்களை திருமணம் செய்துக்கொள்கிறேன் என ஸ்ரீபிரியாவிடம் உறுதிமொழி தந்திருக்கிறார் கார்த்திக்.

அந்த நேரத்தில் கார்த்திக்கை விட, ஸ்ரீபிரியா 2 வயது மூத்தவர் என்றாலும், அவரை நிச்சயமாக திருமணம் செய்துக்கொள்வதாக உறுதி தந்திருக்கிறார் கார்த்திக்.

இதையும் படியுங்கள்: என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!

கைவிட்ட கார்த்திக்

அதனால் இரண்டு பேரும் மிக நெருக்கமாக காதலை தொடர்ந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் சில காரணங்களால், ஸ்ரீபிரியாவை காா்த்திக் திருமணம் செய்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

கார்த்திக் திருமணம் செய்துக்கொள்வார் என நீண்ட நாட்களாக காத்திருந்த ஸ்ரீபிரியாவுக்கு பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. கார்த்திக் இப்படி கைவிட்டு விட்டு போவார் என்று நினைத்தே பார்க்காத ஸ்ரீபிரியா மிகவும் மனம் உடைந்து போனார்.

தற்கொலை முயற்சி

இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீபிரியா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன்பிறகு அவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு தெலுங்கு பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராஜ்குமாரை ஸ்ரீபிரியா 1988ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: “படிக்கவே தனி தைரியம் வேணும்..” மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய அந்த வார்த்தை.. சரோஜா தேவி கண்ணீர்…!

காதல் இளவரசன்

நடிகர் கார்த்திக் நவரச நாயகன் என்பதை விட, காதல் இளவரசன் என்ற பெயருக்கும் மிகவும் பொருத்தமானவர். அவரது காதல் வலையில் சிக்காத நடிகைகளே இல்லை என்றும் கூறலாம். குஷ்பு, ரேவதி போன்றவர்களே இன்றும் எங்களுக்கு பிடித்த நாயகன் நவரச நாயகன் கார்த்திக் தான் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

ஏற்கனவே 2 பொண்டாட்டி

ஏற்கனவே 2 பொண்டாட்டி இருந்த நிலையில், 3 வதாக ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகராக கார்த்திக் இருந்திருக்கிறார் என்று அறிந்த ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.