மொத்த சொத்துமதிப்பே இவ்வளவு தான்.. கணவர் ரவீந்தர் குறித்து உண்மை.. கதறும் VJ மகாலட்சுமி…!

பிரபல தமிழ் சீரியல் நடிகையான மகாலட்சுமி சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்னர் பிஜேவாக தனது பணியை செய்து வந்தார்.

அதன் பிறகு இவரின் அழகை பார்த்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் மகாலட்சுமி.

சீரியல் நடிகை மகாலட்சுமி:

மகாலட்சுமி சீரியல்களில் நடிக்கும் போதே பல சர்ச்சைகளில் சிக்கி வந்ததார் குறிப்பாக சீரியல் தன்னுடன் நடித்த நடிகரான ஈஸ்வரன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரது மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு அந்த விவகாரத்தில் இருந்து வாய் திறக்காமல் நைசாக வெளியேறிவிட்டார். பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரனை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இப்படிப்பட்ட சமயத்தில் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டது வெறும் பணத்திற்காக தான் அவரிடம் இருக்கும் பணம் புகழுக்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இது ரவீந்திரனுக்கும் இரண்டாம் திருமணம் தான் என்றாலும் இதில் அதிகமாக தாக்கப்பட்டது என்னவோ மகாலட்சுமி தான்.

பணத்திற்காக இரண்டாம் திருமணம்:

ஆனால், அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் தன் இஷ்டத்துக்கும் சீரியல்களில் நடிப்பது விளம்பர படங்களில் நடிப்பது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது என ஜாலியாக இருந்து வந்தார் மகாலட்சுமி .

அவருடன் அவுட்டிங் சென்று ஹோட்டல்களில் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு காதலை பொழிந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது. ரவீந்திரனின் உண்மையான சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட நான்கு வீடுகளை சொந்தமாக வைத்திருக்கிறார் ரவீந்திரன் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

சொந்தமாக லிப்ரா ப்ரோடுக்ஷன் என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து இருக்கிறார். மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் படம் இயக்கி பெரும் தோல்வி சந்தித்ததால் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாமல் கடனாளி ஆகிவிட்டார்.

ரவீந்திரன் சொத்து மதிப்பு:

சாந்தனு மற்றும் அதுல்ய ரவியை வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாதால் தொடர்ந்து கடனாளியாகிவிட்டார்.

இவர் இப்படி எடுத்த படங்கள் எதுவுமே தன்னுடைய சொந்த பணத்தை போட்டு எடுக்கவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி தான் படம் எடுத்தார்.

ஆனால் அது பெரும் தோல்வி அடைந்து இவரை பெறும் நஷ்டத்தில் தள்ளிவிட்டு கடனாளி ஆக்கிவிட்டதால் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தான் பண மோசடி வழக்கில் சிக்கி இருந்தார்.

கோடி கணக்கில் கடனாளி:

தற்போது இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கும் ரவீந்திரன் அந்த படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தாலும் கூட அவர் வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாது நிலையில் தான் அவர் தற்போது இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் மகாலட்சுமி ரவீந்திரனை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்று வரும் வெளிவரும் செய்திகளால் அவர் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம்.

இதுதான் ரவீந்திரனின் உண்மையான சொத்து மதிப்பு இனிமேலாவது மகாலட்சுமி குறித்து குறை கூறாமல் இருங்கள் என்கிறது சினிமா வட்டாரம்.