சொட்ட சொட்ட நனைந்த ஈரமான உடையில்.. பிரியாமனவள் பிரவீனா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

மலையாள தொலைக்காட்சியான ஏசியநெட் தொலைக்காட்சியில் தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவியாக நடித்த நடிகை பிரவீனா இந்த புராண தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் நிலைத்த இடத்தை பிடித்துக் கொண்டவர்.

டிவி சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்க கூடிய இவர் பல துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அத்தோடு இவர் ஒரு மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்.

பிரியமானவள் பிரவீனா..

திரைப்படத்தை பொருத்த வரை 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1998 – ஆம் ஆண்டில் அக்னி சாட்சி படத்தில் நடித்திருக்கிறார்.

அத்தோடு 2008-இல் வெளி வந்த ஒரு பெண்ணும் ரெண்டாணும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் திரைப்பட விருதினை பெற்றிருக்கிறார்.

இவர் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால் 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் எலக்ட்ரா மற்றும் இவன் மேக ரூபனுக்கான சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரளா அரசின் திரைப்பட விருதையும் வென்றவர்.

தற்போது டிவி சீரியல்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் 2019-இல் வெளி வந்த பிரியமானவள் என்ற தொடரில் உமா கேரக்டரை செய்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சொட்ட சொட்ட ஈரமான உடையில்..

இதனை அடுத்து இவர் மகராசி தொடரில் சென்பகமாகவும், ராஜா ராணி சீசன் இரண்டில் சிவகாமியாகவும் நடித்து அசத்தி தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்.

மேலும் விஜய் டிவியில் இவர் மகாராணி, ஆதிபராசக்தி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் நம்ம குடும்பம் தொடரில் நடித்திருக்க கூடிய இவர் அமிர்தா தொலைக்காட்சி, ஏசியாநெட், டிடி மலையாளம், சூர்யா தொலைக்காட்சி போன்ற பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக நடித்தவர்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து சொட்ட சொட்ட நனைந்த தாஜ்மஹாலே குடை ஏதும் வேண்டாம் வா வெளியே என்ற பாடல் வரிகளை பாடி பிரவீனாவை திக்கு முக்காட வைத்திருப்பதோடு இந்த புடவை உடையில் கூடுதல் கிளாமர் வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இவர் தற்போது வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு அது மாதிரியான ஆசைகளை அலைபாய வைத்திருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் போட்டோஸ்..

மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஆசைக்கு கறி விருந்தாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும் கூடுதல் கிளாமரில் அதுவும் கோடையில் மழையில் நனைந்து கூலாக மனதை மயக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டோவை பார்த்து வரும் இளசுகள் இந்த வயதில் இப்படியா? என்று பிரமித்து இருப்பதோடு எடுப்பான அழகை குறு குறு கண்களால் பார்த்து பரவசத்தில் கவிஞர்களாக மாறி அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் நச்சென்று பதிந்திருக்கும் இந்தப் புகைப்படம் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் அதிக அளவு லைக்குகளை பெற்றிருப்பதால் இன்னும் படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் பிரவீனாவிற்கு வந்து சேரும்.