மனைவியை பிரிந்தது ஏன்.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

ஒரு பாடகராக, கேஜே யேசுதாஸின் பயணம், மிகவும் கொண்டாடப்பட வேண்டியது. உயிரில் கலந்த ஜீவனுள்ள பல பாடல்களை பாடி, ரசிகர்களை உயிர் உருகச் செய்தவர்தான் கே ஜே யேசுதாஸ்.

கே ஜே யேசுதாஸ்

இப்போதும் கே ஜே யேசுதாஸ் குரலில், அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே, ஆராரிரோ பாடியதாரோ, ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் போன்ற பாடல்களை கேட்டால், மனம் புழுங்கி விம்மும். காந்த வசீகர குரலில் அவர் பாடும் ஹரிவராசனம் பாடலுக்கு ஐயப்ப பக்தர்கள் உருகாத நாளில்லை.
கே ஜே யேசுதாஸ்க்கு 3 ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர்தான் நடிகர் விஜய் ஜேசுதாஸ்.

விஜய் யேசுதாஸ்

தென்னிந்திய மொழிகள் மட்டுமே விடாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பிரபல பாடகராக புகழ்பெற்றவர் கே ஜே ஜேசுதாஸ். இப்போதும் அவரது குரலில் ஹரிவராசனம் என்ற பாடலைக் கேட்டால் பக்தியில் மனம் உருகும்.

அவரது மகன் விஜய் ஜேசுதாஸ், தந்தையைப் போலவே அவரும் பின்னணி பாடகராக பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இப்போதும் பிஸியான பாடகராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிப்பில் ஆர்வம்…

அதுமட்டுமின்றி அவருக்கு நடிப்பு மீதான ஆர்வம் இருந்ததால், சில படங்களில் கதாநாயகனாக, வில்லனாக நடித்திருந்தார் விஜய் ஜேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய் ஜேசுதாஸ். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டனர். இப்போது இருவரும் தனித்து வாழ்வதாகவும், ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்து

இந்நிலையில், தனது விவாகரத்து குறித்தும் அதற்கு பிறகான தனது இன்றைய வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் ஏசுதாஸ்.
அவர் கூறியதாவது, எங்களது பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னை பொறுத்தவரை நான் பாதிக்கப்பட்டவன் என்பதை விட அதிகம் பொறுப்புள்ளவனாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குழந்தைகள்

எனது குழந்தைகளிடம் எப்போதும் சந்தோஷத்தை தக்கவைக்கும் விதமாகவே என்னுடைய செயல்பாடுகளை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா, தனது தாயுடன் இருக்கிறார்களா என்கிற விவரம் எதுவும் வெளியில் நான் சொல்ல தேவையில்லை.

அவர்களுக்கு எங்கே சந்தோசமாக இருக்கிறதோ, அங்கே இருக்கிறார்கள். விவாகரத்து குறித்த அந்த சோகத்திலேயே இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன் என்று, அவர் கூறியிருக்கிறார்.

நடந்தது என்ன?

இன்றைய திரைப்பட நடிகர் – நடிகைகள் பலரது திருமண வாழ்க்கை பாதியுடன் முடிவுக்கு வந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாததுதான்.
அதே நேரத்தில் அதையும் தாண்டிய சில விஷயங்கள் அவர்களை சேர்ந்து வாழ விடாமல் தடுத்து விடுகின்றன. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஏதேனும் சில பிரச்சனைகளால், தனிநபர் குறுக்கீடுகளால் அவர்கள் பிரிந்து விட நேரிடுகிறது.

நடிகர் தனுஷ் நடித்த ஒரு படத்தில் நடித்தவர்தான் அந்த இளம் நடிகர். அந்த படத்தின் ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் சென்றவர்தான் பிரபலத்தின் மனைவி. அப்போது பிரபலத்தின் மனைவிக்கும், அந்த இளம் நடிகருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் அவரிடம் தன் மனதை பறி கொடுத்தார் பிரபலத்தின் மனைவி.

இருவரும் டேட்டிங் சென்றனர். ஒரு கட்டத்தில் அந்த இளம் நடிகரால் அந்த பிரபலத்தின் மனைவி கர்ப்பமானார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் கணவர், மனைவிக்குள் ஏற்பட்ட பிரிவு விவாகரத்து வரை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த இளம் நடிகரின் கண்ட்ரோலில்தான் அந்த பிரபலத்தின் மனைவி இருந்து வருகிறார்.

மனைவியை பிரிந்தது இதனால்தான் என விஜய் யேசுதாஸ் கூறாவிட்டாலும், கோலிவுட் வட்டாரத்தில் இந்த புகை பற்றி கொழுந்து விட்டு எரிந்து பல ஆண்டுகளாகி விட்டது.