“புதருக்குள் ஆடையின்றி.. அப்பாஸ் இல்லாமல் வேறு யாராவது..”. நடிகை மாளவிகா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சில நடிகைகளை பார்த்தவுடன் குடும்பப்பாங்கான தோற்றத்தில், ஒரு கண்ணியமான அழகில் ரசிகர்களின் மனதை தொடுவார்கள்.

உதாரணமாக நடிகை சினேகா, மீனா, ராதா, அம்பிகா, ரேவதி, நதியா, அமலா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இதில் ஒரு சிலர் மிக கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களது கண்ணியமான தோற்றம் ரசிகர்களின் மனதில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும்.

ஆனால் பார்த்தவுடன் பக் என்று தீ பற்றிக்கொள்ளும் ஒரு கவர்ச்சியான அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சில நடிகைகளும் இருக்க செய்கின்றனர். அவர்கள் படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்தாலும், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

மாளவிகா

அந்த வகையில் நடிகை மாளவிகா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக மிகப் பிடித்தமான ஒரு அழகான கவர்ச்சியான நடிகையாக இருக்கிறார். அவர் நடித்த கடந்த 1990 காலகட்டத்தில், அவரை ரசிப்பதற்கு என்றே படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் உண்டு.

தமிழ் சினிமாவில் 1990 முதல் 2000ம் ஆண்டுகள் வரை ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. இந்த பத்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் மாளவிகா நடித்திருந்தார்.

உன்னைத் தேடி

உன்னை தேடி என்ற சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படத்தில் மாளவிகா, அஜீத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து சந்திரமுகி, வசூல் ராஜா எம்பிபிஎஸ். வெற்றிக்கொடி கட்டு, திருமகன், திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்தார்.

திருட்டுப் பயலே

சில படங்களில் மாளவிகா மிகவும் கவர்ச்சியாகநடித்திருந்தார். குறிப்பாக சுசி கணேஷ் இயக்கத்தில் அவர் திருட்டுப் பயலே என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ஜீவன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர்.

மாளவிகாவின் கணவராக மிகப்பெரிய தொழிலதிபர் கேரக்டரில் மனோஜ் கே ஜெயன் நடித்திருப்பார். அவரது நெருங்கிய நண்பராக அப்பாஸ் நடித்திருப்பார். ஆனால் அப்பாஸூக்கும், மாளவிகாவுக்கும் தவறான தொடர்பு இருக்கும். இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருப்பார்கள்.

புதருக்குள் ஆடையின்றி

அதனால் திருட்டுபயலே திரைப்படத்தில் புதருக்குள் ஆடையின்றி நடிகர் அப்பாஸ் உடன் படு மோசமான காட்சியில் நடித்திருப்பார் நடிகை மாளவிகா. இது அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு ரொமான்ஸ் காட்சியாக இருந்தது.

இந்நிலையில் மாளவிகா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய திருமணம் காதல் திருமணம்தான். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணமான பிறகும் ஒரு ஆண்டு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு கர்ப்பமாகி விட்டதால் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி விட்டேன்.

அப்பாஸ் இருந்ததால்…

திருட்டுப் பயலே படத்தில் ஒரு காட்சியில் இருவரும் ஒரு புதருக்குள் இரவு நேரத்தில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு காட்சி இருந்திருக்கும். அதைப் பற்றி மாளவிகா கூறியதாவது, திருட்டுப் பயலே படத்தில் அந்த மாதிரி சீனில் நடிக்கும் போது அப்பாஸ் இருந்ததால் மட்டுமே நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன்.

இதே அந்த கேரக்டரில் வேறொருவர் நடித்திருந்தால் இந்த அளவுக்கு நான் சௌகரியமாக உணர்ந்திருப்பேனா என்பதை சொல்ல முடியாது.

அப்பாஸ் நெருங்கிய நண்பர்

ஏனெனில் நானும் அப்பாஸூம் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். அதனாலயே எனக்கு அந்த காட்சியில் நடிக்கும் போது பெரிய அளவில் பாதிப்பு எதுவும் தெரியவில்லை என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் மாளவிகா.

புலம்பிய ரசிகர்கள்

“புதருக்குள் ஆடையின்றி.. அப்பாஸ் இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் எனக்கு சௌகரியாக இருந்திருக்காது’’ என நடிகை மாளவிகா சொன்னதை கேட்டு, ரசிகர்கள் அப்பாஸூக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என புலம்பி தீர்க்கின்றனர்.