சன் டிவி வானத்தைபோல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்..! மாப்பிள்ளை இவரு தானாம்..!

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் இருக்கிறது.

இந்த நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக இடத்தை பிடித்து விடுகிறார்கள் .

வானத்தைபோல சீரியல்:

திரை நட்சத்திர நடிகைகள் கூட அந்த அளவுக்கு வெகு சீக்கிரத்தில் மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட முடியாது.

ஆனால் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் இல்லத்தரசிகளின் மனதில் மிகவும் சுலபமாக இடத்தை பிடித்து அவர்களின் ஃபேவரிட் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் ஸ்வேதா கெல்ஜி.

இவர் அந்த தொடரில் துளசி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

சீரியல் நடிகை ஸ்வேதா கெல்ஜி:

சன் காட்சியில் வாரம் முழுக்க திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நாடகம் அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

ராமச்சந்திரன் என்பவர் இயக்கி இருந்த இந்த தொடரை சன் நெட்ஒர்க் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தொடரில் குமார், ஸ்வேதா, அஸ்வந்த் திலக் உள்ளட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இதில் சின்ராசுவின் தங்கையாக துளசி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்வேதா கெல்ஜி. இவர் இந்த தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த தொடரில் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தபோது திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு இவரது அண்ணனாக நடித்த நடிகரும் அந்த தொடரில் இருந்து ஒரே சமயத்தில் வெளியேறியதால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

வானத்தைப்போல தொடரை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

ஸ்வேதா கெல்ஜி சீரியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் இவரை சமூக வலைத்தளங்களில் பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவிலே இருக்கிறது .

வாலிப வட்டாரம் அதிக அளவில் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் .இதனுடைய சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திடீர் திருமணம்:

இந்நிலையில் ஸ்வேதா திடீரென தனது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி புகைப்படங்களோடு வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

திருமணம் செய்திருக்கும் கணவரின் பெயர் விராந்த் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருந்த நிலையில் தற்போது இந்த திருமணம் திடீரென நடைபெற்றிருக்கிறது .

அதன் புகைப்படங்களை ஸ்வேதா தனது நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததை எடுத்து இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஜோடி பொருத்தமும் மிகவும் சூப்பராக இருப்பதாக அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.