எதுக்கு ஜிம் உடையில் உடம்பை காட்டி போட்டோ போடுறாங்க ஐஸ்வர்யா.. இது தான் காரணம்.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரையுலகில் ஆண் இயக்குனர்களின் மத்தியில் பெண் இயக்குனர்களும் தங்கள் திறமையை பல படங்களை இயக்கி பாராட்டுதல்களை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக திகழ்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளி வந்த 3 திரைப்படம் இவரது திறமையை திரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதோடு மட்டுமல்லாமல் தற்போது வெளி வந்த லால் சலாம் திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

இந்நிலையில் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விளங்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக மனம் ஒத்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இரண்டு குடும்பம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களது பிரிவு நிரந்தரமானது என்பதை உணர்த்திவிட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உறவினர்களும் பிள்ளைக்காக சேர்ந்து வாழலாமே என்பது போன்ற கருத்துக்களை முன் வைத்த போதும் ஐஸ்வர்யா இணைந்து வாழ விரும்பவில்லை.

இதனை அடுத்து தற்போது சென்னையில் இருக்கும் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற அனைத்து விதமான வேலைகளும் நடைபெற்று வருவதாக இணையங்களில் செய்திகள் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஏன் ஜிம் உடையில் உடம்பை காட்டி..

மேலும் தனுஷை விட்டு பிரிந்து வாழக்கூடிய ஐஸ்வர்யா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டார்.

இதனை அடுத்து விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யாவின் இணைய நடவடிக்கைகளை பாருங்கள்.அவர் அடிக்கடி ஜிம் உடையில் தன்னுடைய உடம்பை காட்டி போட்டோ போடுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் இணையதள பக்கங்களில் அதிக அளவு தென்படுகிறார். இதெல்லாம் எதற்கு செய்கிறார்.

காரணம் சொன்ன பிரபலம்..

இத்தனை நாட்களாக தனுஷ் தன்னை அடக்கி வைத்திருந்தார். என்னுடைய இயல்பு இது தான் என்பதை ரசிகர்களுக்கு காட்டுவதற்காகத் தான் தனுஷ் உடன் சேர்ந்து வாழ்ந்த போது இப்படியான புகைப்படங்களை வெளியிடாத ஐஸ்வர்யா அவரைப் பிரிந்த உடனே இப்படியான புகைப்படங்களை வெளியிடுகிறாரோ..

அப்படி இவர் வெளியிட காரணம் என்ன? தனுஷ் மீது ஒரு தவறான பிம்பத்தை கொடுப்பதற்கு தானே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

அத்தோடு தன்னை தனுஷ் அடக்கி வைத்திருந்தார் என்பது போன்ற பிம்பத்தை கொடுக்கத் தான் இப்படி எல்லாம் செய்கிறாரா? என்ற சந்தேகத்தை கிளப்ப கூடிய வகையில் பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை விளாசி தள்ளி இருக்கிறார்.