கிறுக்கு பிடிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்.. டூ பீஸ் நீச்சல் உடையில் தாறு மாறு என்ட்ரி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் என்பதால் கீர்த்தி சுரேஷ் தமிழ் பெண்ணாகவே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மலையாள குழந்தை நடிகையாக கீர்த்தி சுரேஷ்:

முதன் முதலில் இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படம் ஓரளவுக்கு பேசப்பட்டிருந்தாலும் மிகப்பெரிய அடையாளத்தை கீர்த்தி சுரேஷுக்கு கொடுக்கவில்லை.

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

தொடர்ந்து விஜய் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படம் கீர்த்தி சுரேஷின் அடையாள படமாக அமைந்ததோடு தொடர்ச்சியாக அடுத்தடுத்து தொடரி, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் , சாமி 2 , சண்டக்கோழி, சீமராஜா , உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

வெற்றி திரைப்படங்கள்:

கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் இவர் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் அந்த திரைப்படத்தில் இவரது ரோல் தேவையில்லாத ரோலாக இருந்ததாக விமர்சித்து வந்தனர்.

தமிழில் நடித்துக் கொண்டே மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்த வந்தார் தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு அங்கும் பெயரும் புகழும் கிடைத்தது.

மகாநடி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்கள் கிடைக்குமா என ஏங்கி கொண்டிருக்கிறேன் அதுபோன்று நூல்களில் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என சமீபத்தை பேட்டி ஒன்றில் கூட தெரிவித்து இருந்தார்.

இப்படி ஆன நேரத்தில் பவ்யமான கதாபாத்திரம் ஹோம்லியான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது நீச்சல் உடையணிந்து சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்

ஆம், நடிகை கீர்த்தி சுரேஷின் பட வாய்ப்புகள் குறைந்து வருவதை தொடர்ந்து முதன்முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று தகவல்கள் அக்கட தேசத்தை ஊடகங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்ச்சை நடிகருடன் நீச்சல் உடையில்:

பிரபல நடிகர் நிதின் ரெட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கிருந்து நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதே நீச்சல் உடையில் நடிக்க தயார் என்பதைத்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி மறைமுகமாக தெரியப்படுத்துகிறார் என்று தகவல்கள் விமர்சனங்கள் எழுந்தன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நீச்சல் உடையில் நடிகை சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

எனினும் இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.