நான் நடித்த பிட்டு படத்தை பார்த்து என் தம்பி இதை பண்ணான்.. கூச்சமின்றி கூறிய ஷகீலா..!

ஆபாசமான திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ஷகீலா .

90ஸ் காலத்தில் வாலிப வட்டத்தின் கிளுகிளுப்பான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார. குறிப்பாக இவர் மலையாளத்தில் பல்வேறு பிட்டு திரைப்படங்களில் நடித்து அங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரபலமான நடிகையாகவும் இருந்து வந்தார் .

நடிகை ஷகீலா:

அது மட்டும் இல்லாமல் சகிலாவின் திரைப்படங்களுக்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வசூல் வாரி குவித்ததால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சகிலாவின் படங்கள் வெளிவருகிறது என்றாலே பயப்படுவார்களாம்.

ஷகீலாவின் கவர்ச்சி படத்தால் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்களின் படங்கள் பெரிய அளவில் அடி வாங்கியது.

இதனால் மலையாள சினிமாவிற்கு சகிலா ஒரு சாபக்கேடாக பார்க்கப்பட்ட வந்தார். கிட்டத்தட்ட தன்னுடைய 15ஆவது வயதிலேயே பிளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி ஆபாச படங்களில் நடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

குடும்ப வறுமை காரணமாக இது போன்ற படங்களில் நடித்து வருமானம் ஈட்டுவதாக முதலில் திரைத்துறையில் இறங்கிய சகிலா பின்னர் அதையே தன்னுடைய முழு நேர தொழிலாக எடுத்துவிட்டார்.

மலையாளத்தில் கொடிகட்டி பரந்த ஷகீலா:

சகிலாவின் திரைப்படங்கள் வெளி வருகிறது என்றாலே முகத்தை மூடிக்கொண்டு தியேட்டருக்கு படையெடுக்கும் ஆண்கள் கூட்டம் ஏராளமானோர் அந்த காலத்தில் இருந்தார்கள்.

இதனாலே வேறு சில குடும்ப பாங்கான கதைகள் கொண்ட படங்களுக்கு ஆட்கள் இல்லாமல் தியேட்டர் வெறிச்சோடி கிடந்தது .

இதனால் சகிலாவின் சாம்ராஜியத்தையே காலி செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த மலையாள சினிமா திரையுலகமும் ஒன்று கூடி தயாரிப்பு சங்கத்தில் ஒரு முடிவு எடுத்தார்கள்.

சகிலாவின் திரைப்படங்களை யாரும் எடுக்கவே கூடாது. படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என கூற சகிலாவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

ஷகீலாவுக்கு ரெட் கார்ட்:

இதனால் சகிலா அங்கு பிழைப்பு நடத்த முடியாமல் சென்னையில் வந்து தஞ்சம் அடைந்தார் .சென்னைக்கு வந்த பிறகு சில காமெடி கதாபாத்திரங்களையும் கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருமானம் ஈட்டி வயிற்று பிழைப்பை நடத்தி வந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வாய்ப்புகள் கூட அவருக்கு கிடைக்காமல் போக வீட்டிலேயே முடங்கிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி பிரபலமாக ரசிகர்களால் அறியப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார்.

இந்த நிலையில் தற்போது தான் பிட்டு படத்தில் நடித்து வந்ததையும் அதை குடும்பத்திற்கு தெரியாமல் நடித்து நடித்து வந்த சமயத்தில் தன்னுடைய தம்பி அதை பார்த்துவிட்டு அதர்ந்து போனதை குறித்து பேசி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை சகிலா.

அதாவது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் வரும் காட்சி என்னுடைய வாழ்க்கையில் உண்மையிலேயே அப்படி நடந்திருக்கிறது .

பிட்டு படத்தை பார்த்த தம்பி:

ஆம் நான் நடித்த பிட்டு படம் ஒன்று என்னுடைய தம்பி ஒருமுறை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அதை பார்க்க பாண்டிச்சேரியில் கிளம்பி சென்று இருக்கான் .

அப்போது அங்கு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தபோதுதான் நான் ப்ளூ ஃபிலிம்களில் நடிக்கிறேன். அதில் நான் வந்து போனதை பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டான்.

உடனே அழுது கொண்டே பாண்டிச்சேரியில் இருந்து பைக் எடுத்து சென்னை வந்தவனுக்கு கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தது.

நான் என்ன ஏது என்று விசாரித்த போது, நீ இது போன்ற படங்களில் தான் நடிக்கிறாயா? என கேட்டு கதறி அழுதான்.

ஆம்,நான் நடிப்பது கிளாமர் படங்கள் தான். இதுதான் என்னுடைய கெரியர் என பொறுமையாக எடுத்து கூறி புரிய வைத்தேன் என ஷகிலா அந்த பேட்டில் கூறியிருக்கிறார்.