உன் கூட குழந்தை பெத்துக்கணும்ன்னு சொன்னேன்.. ஹேப்பி ஆகிட்டாரு.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

சின்ன திரையில் தன்னுடைய இயல்பான வர்ணனைகளால் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கும் VJ மகாலட்சுமி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டவர்.

ரவீந்திரரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சீரியல் நடிகரான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்ததை அடுத்து அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் இவரது திருமணம் அமைந்தது.

VJ மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக தற்போது கலக்கி வருகிறார்.

இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவரை பலரும் பல்வேறு வகைகளில் தற்போது திட்டி வருவதற்கு காரணம் வில்லியாக இருக்கும் இவர் தன்னுடைய தம்பி குடும்பத்தை பழி வாங்க கூடிய கேரக்டரில் பக்காவாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரநாளை திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல்வேறு விதமான விமர்சனங்களும் எழுந்தது.

இதற்கு காரணம் இவர் பணத்திற்காக தான் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது.

 

எனினும் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்த ஜோடிகள் தற்போது வரை ஒற்றுமையாக வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் தங்களை உருவத்தை கேலி செய்த நபர்களுக்கு பொறுமையாக பதிலடியை தயாரிப்பாளர் ரவீந்தர் கொடுத்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

உன் கூட பிள்ள பெத்துக்கணும்..

இதனை அடுத்து தற்போது விஜே மகாலட்சுமி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் பலரும் எங்களது உடல் அழகு, முக அழகை குறிப்பிட்டு பல்வேறு வகைகளில் கலாய்த்து பேசி இருக்கிறார்கள்.

ஆனால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த போது அவரிடம் முதன் முதலில் சொன்னது உங்களுக்காக நான் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தேன்.

இதைக் கேட்டு இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்தாரும் மிகுந்த சந்தோஷத்தோடு அதை வரவேற்றார்கள். எனக்கும் ஒரு சிறு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அதற்கு இவர் மறுப்பு தெரிவிக்க கூடாது என்பதால் தான் முதலில் உன் கூட குழந்தை பெத்துக்கணும் சொன்னேன்.

மனுஷன் ஹேப்பி ஆயிட்டாரு..

இதைக் கேட்ட உடனே அவர் ஹேப்பி ஆகிவிட்டார். என்று ஓபனாக விஜே மகாலட்சுமி பகிர்ந்த விஷயம் இணையத்தில் தற்போது வைரலாக மாறி வருகிறது.

ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கக்கூடிய நிலையில் இவர் இப்படி பேசி இருப்பதை அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளுமா என்ற ரீதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவனும் தனக்கு தங்கையோ தம்பியோ வேண்டும் என்று தான் சொல்லி வருகிறான்.

எனவே நிச்சயமாக எங்கள் வீட்டில் மீண்டும் ஒரு குழந்தை வரும் என்று சொன்னதை அடுத்து நிச்சயமாக அது நடக்க வேண்டும் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் ஓப்பனாக பேசியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இது மட்டுமில்லாமல் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய வகையில் ஒரு புது டாபிக்காக உருவெடுத்துள்ளது.