ஜீவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை.. ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? பகீர் கிளப்பிய பிரபலம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க துவங்கி பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜிவி பிரகாஷ் -சைந்தவி:

இவர்களது திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்கள் இருவரும் தங்களது கெரியரில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு பல வெற்றி படங்களுக்கும் இசையமைத்து மிகப்பெரிய நட்சத்திர இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருந்து சமயம் அது.

பாடகி சைந்தவியும் சிறுவயது முதல் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். முதலில் கச்சேரிகளில் பாட ஆரம்பித்து பின்னர் ஜிவி பிரகாஷின் உதவியுடன் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளை அதிகம் கிடைத்தது என்றால் அது மிகை ஆகாது.

ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களில் சைந்தவிக்கு வாய்ப்பு கொடுத்து சைந்தவி யார் என்பதை அடையாளப்படுத்தினார் ஜிவி பிரகாஷ் .

அத்துடன் மற்ற படங்களும் ஜிவி பிரகாஷின் மனைவி என்பதால் அவருக்கு வாய்ப்பு தேடி வர துவங்கியது. இப்படி ஜிவி பிரகாஷின் கணவர் பிரபலத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் சைந்தவி .

அந்தர் பல்டி அடித்த சைந்தவி:

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் தனக்கு டார்ச்சர் கொடுப்பதாக அப்படியே அந்தர் பல்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதுதான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த திருமண வாழ்க்கையில் இவர்கள் சிறந்த ஜோடிகளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் திடீரென தாங்கள் இருவரும் பிறந்து வாழ போவதாக கூறி விவாகரத்து செய்தியை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தனர்.

இவர்களுக்கு அன்வி என்று நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறார். குழந்தை இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையின் எதிர்காலத்தை கருதியாவது இவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாம்.

தற்போது இந்த குழந்தையின் நிலைமை என்ன ஆவது? இதுதான் நட்சத்திரங்களின் வாழ்க்கை அவர்கள் இஷ்டத்துக்கும் கல்யாணம் செய்து கொள்வது பின்னர் பிரிக்கவில்லை என இரண்டாம் மூன்று ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விடுகிறார்கள்.

இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது அவர்களின் பிள்ளைகள் தான் என பல நெட்டிசன்கள் விமர்சித்தாலும் கூட அதை அவர்கள் பெரிது படுத்தாமல் இருந்து வருகிறார்கள்.

சொத்துக்களை சுருட்டிய சைந்தவி?

இந்நிலையில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷின் விவாகரத்து விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான உமாபதி வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

குறிப்பாக அவர் சைந்தவியின் மிக மோசமான குணத்தை வெட்ட வெளிச்சமாக்க இருக்கிறார். அதாவது சைந்தவி போன்ற பெண்கள் ஒண்ணுத்துக்கும் ஆகவே மாட்டாங்க.

உங்க வளர்ச்சியை பேஸ் பண்ணி. கணவரின் வளர்ச்சியை பேஸ் பண்ணி அவங்களால வளந்துட்டு கடைசில அவங்களையே பிடிக்கல ஆரம்பத்திலிருந்து அவரை பிடிக்க அவரை பிடிக்கலை என்று சொல்வதெல்லாம் மகா மட்டமான எண்ணம்.

அது மட்டும் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையே போச்சு, சுதந்திரமே போச்சு அப்படின்னு பின்னாடி வந்து சொல்றாங்க அன்னைக்கு அவன் பிரபலமா இருப்பான் அதை பயன்படுத்திக்கிட்டு வாழ்ந்துட்டு கடைசியில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்ல வேண்டியது.

சுதந்திரம் வேண்டுமென்றால் உங்களுடைய சொந்த காசை பயன்படுத்தி வாழுங்கள். மற்றவர்களின் காசை பயன்படுத்தக் கூடாது.

பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு கடைசியில் அவர்களை கழட்டி விடுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் வெளியில் வந்து அவர்கள் மிகவும் மோசமானவர்கள் டார்ச்சர் செய்தார் என பகிரங்கமாக புகார்களை கூறுவது தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பலகோடி ஜீனாம்சம்:

சைந்தவி பல பேட்டிகளில் நான் ஜிவி பிரகாஷை சிறுவயது முதலே காதலித்து வந்தேன் என கூறுகிறார் ஆனால் அவரைப் பிரிந்து வந்த பிறகு நிறைய காசுகளை வாங்கி விட்டார்.

எத்தனை ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தாரோ அதற்கேற்றவாறு சொத்துக்களை அடிச்சுட்டு தான் வந்திருக்காங்க.

அவரை விட்டு வெளியே வந்த பிறகு அவர் கொடுமைப்படுத்துகிறார் டார்ச்சர் படுத்துகிறார் என பொய் கூறுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பத்திரிக்கையாளர் உமாபதி தெரிவித்திருக்கிறார்.