இந்த பெண்ணுடன் தான் தனுஷிற்கு இரண்டாம் திருமணம்..! வெளியான பரபரப்பு தகவல்..!

நடிகர் தனுஷ் பன்முக திறமையை கொண்ட அற்புத நடிகர். இவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர்.

இவரது அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அண்ணன் இயக்குனர் செல்வராகவன். இதனை அடுத்து திரைத்துறையில் களம் இறக்கப்பட்ட இவர் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நடிகர் தனுஷ்..

2002-ஆம் ஆண்டு முதல் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

40 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததின் மூலம் இவருக்கு 14 தென்னிந்திய விருதுகள், தேசிய விருதுகள், 9 விஜய் டிவி விருதுகள், 7 தென் இந்திய விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய விருதுகள் என பல்வேறு விருதுகளை வென்றவர்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது நடித்த வரும் படம் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதோடு தற்போது விவாகரத்துக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்ற விஷயங்கள் இணையத்தில் வைரலாகியது.

அந்தப் பெண்ணோடு இரண்டாவது திருமணம்..

தற்போது பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தனுஷின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே செய்த திருமணம் விவாகரத்தை நோக்கி சென்று வரும் வேளையில் இரு வீட்டிலும் இவர்களை சமரசம் வைத்து மீண்டும் சேர்ந்து வாழ எடுத்த முயற்சிகள் பல பலன் அளிக்காமல் தோல்வியை அடைந்தது.

இந்நிலையில் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா சொந்த பந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து தனுசுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறி இருக்கக்கூடிய இவர் சினிமா துறையைச் சார்ந்த பெண் என்றால் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும்.

எனவே தான் சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்ற பகீர் தகவலை தெரிவித்திருக்கிறார்.

வெளிவந்த பரபரப்பு தகவல்..

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் வேளையில் விவாகரத்துக்கு பிறகு தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பிரபல பத்திரிக்கையாளர் கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு சில ரசிகர்கள் மீண்டும் ஐஸ்வர்யாவும் தனுஷும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

எனவைஸஇனி வரும் நாட்களில் இவர்கள் இணைந்து வாழ்வார்களா? அல்லது பத்திரிக்கையாளர் சொன்னது போல சொந்தத்தில் தனுசுக்கு திருமணம் நடக்குமா? என்ற விஷயம் உறுதியாக தெரிய வரும்.