தமிழ் ரசிகர்கள் ஹிந்தி படம் பார்ப்பதில்லை.. வருத்தமா இருக்கு.. நடிகை ஜோதிகா வேதனை..!

வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகான ராட்சசி நடிகை ஜோதிகா வாலி படத்தில் தனது வனப்பான மேனி அழகை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

 

இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து இருக்கும் நடிகையாக விளங்குகிறார். அத்தோடு பல மாஸ் கிட் படங்களை கொடுத்த நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார்.

நடிகை ஜோதிகா..

தமிழைப் பொறுத்த வரை பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த நடிகை ஜோதிகா சூர்யாவோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு சூர்யாவை கைப்பிடித்தார்.

இதனை அடுத்து தற்போது மீண்டும் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வரும் ஜோதிகா பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஜோதிகா தற்போது அளித்திருக்கும் பேட்டியானது இணையங்களில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

90-களில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக உலா வந்த நடிகை ஜோதிகா தனது அழகான தோற்றத்தாலும், துரு துரு நடிப்பாலும் இளசுகளை கவர்ந்தவர்.

அதுவும் இவரது பாடி எக்ஸ்பிரஷனை பார்த்து அசந்த ரசிகர்கள் இவரை பற்றி சொல்லும் போது சற்று ஓவராக எக்ஸ்பிரஷன் செய்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் ஹிந்தி படம் பார்ப்பதில்லை..

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த முதல் நிலையில் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் நாள் செல்ல செல்ல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சந்திரமுகி படத்தில் சந்திரமுகியாக நடித்து சூப்பர் ஸ்டாருக்கே டப் கொடுத்த நடிகையாக திகழும் இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியில் சைத்தான் என்ற திரைப்படம் வெளி வந்ததை அடுத்து தற்போது ஸ்ரீகாந்த் என்ற படம் வெளி வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வகையில் 25 வருடங்களாக பாலிவுட்டில் எந்த ஒரு சாதனையும் செய்யாத இருந்த எனக்கு இப்போது இப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. இந்த வரவேற்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனக்கு ஏற்ற கதை ஏதும் பாலிவுட்டில் கிடைக்காததால் தான் நடிக்கவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருக்க கூடிய இவர் தென்னிந்திய, வட இந்திய ரசிகர்கள் என சினிமாவை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கூறியிருக்கிறார்.

ஜோதிகாவின் வேதனை..

அத்தோடு வட இந்தியாவில் தென்னிந்திய படங்களை அதிகளவு பார்க்கக்கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தென்னிந்திய ரசிகர்கள் ஹிந்தி படங்களை விரும்பி பார்ப்பதில்லை இருப்பதில் எனக்கு சற்று வேதனையை தந்துள்ளது என்ற விஷயத்தை தெரிவித்ததை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதனை அடுத்து இதனை ரசிகர்கள் கேள்விப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஜோதிகா கூறுவதில் உண்மை உள்ளது என்ற கருத்தை சொல்லி வருகிறார்கள்.

எனவே இனி வரும் நாட்களில் ஹிந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் கட்டாயம் பார்ப்பார்கள் என சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஹிந்தி மொழி தெரியாததால் தான் பெரும்பாலான தென்னிந்திய ரசிகர்கள் ஹிந்தி படத்தை விரும்பவில்லை என்றும் கலைக்கு மொழி பேதம் இல்லை என்ற கருத்தையும் சொல்லி வருகிறார்கள்.