நாதஸ்வரம் சீரியல் நடிகை இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை இவரு தானாம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீதிகா. 37 வயதாகும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில் தான்.

சீரியல்களில் நடிப்பதற்காக சென்னையில் வந்து இங்கு செட்டில் ஆகி தமிழ் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

சீரியல் நடிகை ஸ்ரீதிகா:

சீரியல் நடிகையாக தனது வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னர் தொகுப்பாளியாக பணிபுரிந்து அதன் மூலம் பிரபலமாகி பின்னர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சின்னத்திரைகளில் நடிக்க ஆரம்பித்தார் .

இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. ஆம் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் மிகவும் பவ்யமான மற்றும் ஹோமிலியான கேரக்டரில் நடித்து எல்லோரது மனதை கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

முதல் படத்திலேயே ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீதிகாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்னவோ “நாதஸ்வரம்” தொடர் தான் .

இந்த தொடரில் மலர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடர் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது.

நாதஸ்வரம் சீரியலில் பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் கதாநாயகன் ஆன கோபி மீது காதல் கொண்டிருப்பார். ஆனால், வேறொருவரின் கட்டாய திருமணத்தை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு கோபியை மறுபடியும் திருமணம் செய்து கொண்டு வாழ்வார் .

நாதஸ்வரம் மலர்:

இந்த சீரியலில் மலர் கேரக்டர் மிகப்பெரிய அளவில் மக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

அதன்படி உறவுகள், என் இனிய தோழி, கல்யாணப்பரிசு , சங்கமம், குலதெய்வம் உள்ளிட்ட பிற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வேங்கை திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து அசத்தி இருப்பார்.

அந்த திரைப்படத்தில் உண்மையாக அண்ணன் தங்கை பாசத்தை ஸ்ரீதிவ்யா வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும், அப்பா மீது அதிக பாசம் கொண்ட செல்லப் பெண்ணாகவும் அவர் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார் .

இதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமும் ஆனார். அத்துடன் திரைப்படங்களில் நடித்தது மட்டும் அல்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் .

ஆம், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகனுக்கு டப்பிங் பேசியது ஸ்ரீதிகா தான்.

திரைப்பட நடிகை… டப்பிங் ஆர்ட்டிஸ்ட்:

அத்துடன் ஈரம் திரைப்படத்தில். சிந்து மேனனுக்கு டப்பிங் பேசி அசத்தி இருப்பார். இது பலருக்கும் தெரிந்திடாத விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அழகு பெண்ணாக. பவ்வியமான தோற்றத்தோடு சீரியல் நடிகைகளில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் ஸ்ரீதிகா.

கடந்த 2019 ஆம் ஆண்டு சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து செய்து வைத்த இந்த திருமணத்தில். சில பல மன கசப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதிகா கணவர் சனீஷை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். ஆம் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகைப்படத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

இரண்டாம் திருமண அறிவிப்பு:

“நானும் ஆரியனும் ஏற்கனவே ஒரு திருமண பந்தத்தில் இருந்து முறையாக அதில் பிரிந்து விட்டு தற்போது நாங்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கிறோம்.

எங்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமண வாழ்க்கை இருந்தாலும் அதை பற்றி எல்லாம் பேசி அந்த உறவை கொச்சைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

இந்த நட்பும் அன்பும் எங்களை அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்கிறது. பெற்றோர்களின் ஆதரவுடன் நாங்கள் விரைவில் பதிவு திருமணத்தை செய்ய இருக்கிறோம்.

எங்களின் இந்த முடிவுக்கு உங்களது அன்பையும் ஆதரவையும் பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். விரைவில் இதுகுறித்த புகைப்படத்தின் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட காத்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே நீங்கள் எல்லோரும் எங்களுடைய இந்த புது வாழ்க்கைக்கு ஆதரவு தர வேண்டிக் கொள்கிறோம் என ஸ்ரீதிவ்யா மற்றும் ஆரியன் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

சீரியல் நடிகருடன் காதல்:

முன்னதாக ஸ்ரீதிகாவின் திருமணத்திற்கு ஆரியன் தனது மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது .

ஆகவே இவர்கள் அப்போதிலிருந்து நண்பர்களாக பழகி வந்த நிலையில் கணவரை பிரியும் சமயத்தில் கூட அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராமில் இருவரும் சேர்ந்து ரில்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இதனால் இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் பரவி வைரலாக பேசப்பட்டதை அடுத்து தற்போது இவர்கள் இருவருமே இதை உறுதி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.