நடிகரிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்.. ஒரே அறையில் சந்திப்பு… தீராத காதல் சர்ச்சை.. கொளுத்தி போட்ட நடிகர்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்பட நடிகையான மேனகாவின் மகளாவார். எனவே வாரிசு நடிகையாக விளங்கும் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து வளர்ந்து பெரியவர் ஆனதும் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்தார்.

இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

அந்த வகையில் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

மேலும் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் பைரவா திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து வரக்கூடிய இவருக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு வகையான உதவிகளை தளபதி விஜய் செய்து வருவதாக கிசுகிசுக்கள் வெளி வந்தது.

நடிகரிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்..

மேலும் கீர்த்தி சுரேஷுக்கும் தளபதி விஜய்க்கும் இடையே நெருக்கம் இருப்பதாக இணையங்களில் பல்வேறு வகையான செய்திகள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யிடம் மயங்கி இருக்கிறார். அவருடன் காதலில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இணையங்களில் வைரலாகி வருகின்றது.

கொளுத்தி போட்ட நடிகர்..

இதனை தொடர்ந்து இதற்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் பாண்டியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் பாண்டிச்சேரியிலேயே படப்பிடிப்பு என்பதால் அங்கேயே ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் நடிகர் விஜய். அதே சமயம் நடிகை கீர்த்தி சுரேஷின் பாண்டிச்சேரியிலேயே ஷூட்டிங்கில் இருக்கிறார்.

அவர் நடித்துக் கொண்டிருந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பும் அங்கு தான் நடந்து கொண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் தங்கி இருந்த அதே ஹோட்டல்  தான் தங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இருவரும் ஒரே அறையில் சில மணி நேரங்கள் தங்கியிருந்ததாக படக்குழுவினர் அந்த ஹோட்டல் வளாகத்தில் பேசிக் கொண்டார்கள் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். இது தான் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி விட்டிருக்கிறது. 

மேலும் தற்போது தளபதி விஜய் அவர்கள் அவர் மனைவியோடு இல்லாத காரணத்தால் இது பற்றி ரசிகர்கள் அதிகளவு யோசித்து வரக் கூடிய வேளையில் பயில்வானது பேச்சு அவர்கள் மனநிலையில் மாறுதல்களை ஏற்படுத்தி விட்டது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

வேறு சில ரசிகர்களும் பயில்வான் கூறியதில் உண்மை இருக்குமா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான விளக்கத்தை இருவரில் ஒருவராவது கொடுத்தால் உண்மை நிலை என்ன என்பது விரைவில் தெரியவரும்.