நூதனமான முறையில் யாஷிகா ஆனந்தை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..! இப்படி கூடவா பண்ணுவாங்க..?

தமிழ் சினிமாவில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பை சேர்ந்த யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்காக முயற்சிகள் செய்து வந்ததன் பலனாய் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கவலை வேண்டாம் திரைப்படத்தில் முதன் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே சச்சையான கதாபாத்திரத்தில் நடித்ததன் காரணமாக தொடர்ந்து அவருக்கு அந்த மாதிரியான கதாபாத்திரங்களே கிடைக்க துவங்கின. இதனால் ஒரு ஆரோக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளானார் யாஷிகா ஆனந்த்.

இந்த நிலையில் திரைப்படத்தில் வாய்ப்பு தேடி வந்த காலம் முதலே அவருக்கு நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஒரு இயக்குனர் பட வாய்ப்பு தருகிறேன் என்று அழைத்து அவரை அடைய முயற்சித்தது குறித்து ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.

அழைப்பு விடுத்த இயக்குனர்:

யாஷிகா ஆனந்த் ஆரம்ப கட்டத்தில் அவருடைய 16 வயதிலேயே படப்பிடிப்பு வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கி வந்தார். இந்த நிலையில் ஒருமுறை ஒரு இயக்குனர் ஆடிஷன் இருக்கிறது என்று கூறி யாஷிகா ஆனந்தை அழைத்துள்ளார்.

யாஷிகா ஆனந்தும் நேரில் தனது தாயுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளார் ஆடிஷன் அறைக்குள் யாஷிகா ஆனந்த் வந்த பிறகு அவரிடம் காட்சிகளை இயக்குனர் கூறும் பொழுது இது ஒரு விமான நிலைய காட்சி இது. விமான நிலையத்தில் ஹீரோ உங்களை பிரிந்து வெளிநாட்டுக்கு செல்ல போகிறார்.

வெகுநாட்கள் கழித்துதான் அவர் திரும்ப வருவார் இந்த நிலையில் உங்கள் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் அவருக்கு உதட்டு முத்தம் கொடுக்க வேண்டும். இதுதான் காட்சி. இப்பொழுது என்னை கதாநாயகனாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எனக்கு லிப்லாக் முத்தம் கொடுக்க வேண்டும்.

இயக்குனரின் எண்ணம்:

அது ஓ.கே ஆகிவிட்டால் உடனே உங்களுக்கு இந்த படத்தில் நான் வாய்ப்பு கொடுத்து விடுவேன் என்று சூசகமாக கூறியிருக்கிறார் அந்த இயக்குனர். இயக்குனரின் தவறான எண்ணத்தை புரிந்து கொண்ட யாஷிகா ஆனந்த் இந்த இடத்தில் எந்த ஒரு கேமராவும் இல்லை, மேலும் நீங்கள் கதாநாயகனும் இல்லை.

அதுமட்டுமின்றி எனக்கு 16 வயதுதான் ஆகிறது இப்படியான காட்சிகளில் அதனால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த இயக்குனர் யாஷிகா ஆனந்தை கட்டி பிடிக்க வந்துள்ளார் பிறகு அவரை தடுத்து விட்டு வேகமாக தனது தாயிடம் ஓடி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

பட வாய்ப்புக்காக பெட்ரோல் செலவு செய்து இங்கு கிளம்பி வந்தால் இவர்கள் இப்படி நம்மை நாசம் செய்ய பார்க்கிறார்களே என்று சொல்லி அப்பொழுதே யாஷிகா ஆனந்த் வருந்தியுள்ளார். இந்த நிகழ்வை பேட்டியிலும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு யாஷிகா ஆனந்த் நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் மோசமானவையாகதான் இருந்தன என்பதுதான் சோகமான விஷயம்.