ஹன்சிகா வீட்டில் அந்த விருந்து.. மேட்டர் தெரிஞ்சதும்.. எஸ்கேப் ஆன நடிகர் சிம்பு..!

மும்பை மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவராக நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை பருவத்திலேயே திரைப்படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து ஹிந்தி சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தொடர்ச்சியாக பாலிவுட்டில் பல படங்களில் நடித்த வந்த அவருக்கு பெரிதாக மிகப்பெரிய அளவில் மார்க்கெட் ஏதும் கிடைக்காததால் தென் இந்திய சினிமா பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்தார்.

நடிகை ஹன்சிகா மொத்வானி:

அப்படித்தான் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஹன்சிகா அவர் அறிமுகமான குறிகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார் .

நட்சத்திர ஹீரோயின் என்ற ரேஞ்சுக்கு ஹன்சிகாவின் பப்லியான தோற்றமும் கியூட்டான எக்ஸ்பிரஸ் கொழுக் மொழுக் லுக்கும் தான் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழில் வேலாயுதம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 ,பிரியாணி ,தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள , ரோமியோ ஜூலியட் , அரண்மனை 2, புலி , இஞ்சி இடுப்பழகி , போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் , போகன் , துப்பாக்கி முனை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே நடிகை ஹன்சிகா வாலு திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் கெமிஸ்ட்ரி காரணமாக காதலிக்க தொடங்கினார்கள் .

சிம்புவுடன் காதல்:

இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் அதை பெற்றோர்களுக்கும் தெரிவித்து திருமணம் நிச்சயதார்த்தம் கூட செய்து கொள்ள இருந்தனர் .

ஆனால், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிறந்து விட்டார்கள்.

இந்நிலையில் இவர்களது பிரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்த ஒரு ரகசிய விஷயம் தற்போது கசிந்து இணையதளங்கள் முழுக்க வைரல் ஆகி வருகிறது. அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது, நடிகை ஹன்சிகா தன்னுடைய வீட்டில் சக நடிகர்களுக்கு மது விருந்து கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார் .

இந்த மது விருந்தில் கலந்து கொண்ட போதுதான் ஹன்சிகாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அவருடன் காதலில் விழுந்தார் நடிகர் சிம்பு.

உச்சகட்டமாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் அளவுக்கு தங்களுடைய காதலை வளர்த்தனர். இது குறித்து நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் கேள்வி எழுப்பிய பொழுது, ஹன்சிகா போன்ற ஒரு பெண் எங்களுக்கு மருமகளாக வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

அது இருவருடைய தனிப்பட்ட முடிவு. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

காதல் முறிவிற்கு காரணம்:

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இருவருக்கும் ஏற்பட்ட விரிசல் காதலை முறித்துக் கொள்ளும் அளவுக்கு சென்றது.

நடிகை ஹன்சிகா தற்போது தன்னுடைய தோழியின் கணவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

ஆனால், நடிகர் சிம்பு இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருந்த நடிகர் பிரேம்ஜி கூட தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் ஆகிவிட்டார்.

தற்போது நடிகர் சிம்பு முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதனால் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் காதல் உருவானதோ..? அதானாலேயே தான் இருவரும் பிரிந்தும் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மது விருந்தில் கலந்து கொண்டதன் மூலம் ஹன்சிகாவுடன் நெருக்கும் ஏற்பட்டு காதலிக்க தொடங்கினார் நடிகர் சிம்பு.

பல ஆண்டுகளுடன் போதை விருந்து:

அதே மது விருந்தின் மூலம் தான் ஹன்சிகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தும் இருக்கிறார். எந்த மது விருந்தாக இருந்தாலும் அதில் சிம்புவை மறக்காமல் அழைத்துவிடும் நடிகை ஹன்சிகா ஒரு கட்டத்தில் தான் அப்போது நடித்துக் கொண்டிருந்த படங்களில் நடித்த கதாநாயகர்கள் அந்த படக்குழுவினருக்கு மட்டும் விருந்து கொடுப்பதை செய்து கொண்டிருக்கிறார்.

காரணம் குறிப்பிட்ட ஹீரோக்கள் சிம்பு அந்த மது விருந்துக்கு வருவதை விரும்பவில்லை என்ற காரணத்திற்காக இதனை செய்திருக்கிறார் நடிகை ஹன்சிகா என்று கூறுகிறார்கள்.

இதனால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளான நடிகர் சிம்பு ஹன்சிகாவுடன் இருந்த காதலையும் முறித்துக் கொண்டிருக்கிறார் என்று இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.