பிரிந்து சென்ற கணவர்.. வீட்டில் அதுக்குன்னு தனி இடம்.. லட்சத்தில் புரளும் VJ மகேஸ்வரி..!

வெள்ளித்திரை சின்னத்திரை என்ற வித்தியாசம் இல்லாமல் அதில் பணியாற்றக்கூடிய நபர்களின் புகழ் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி, ஜீ தமிழ் என தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரியும் VJ மகேஸ்வரி பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதை அடுத்து பெரிய அளவில் பிரபலமானார்.

VJ மகேஸ்வரி..

மேலும் இவர் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை நிறுத்தி விடாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த புதுக்கவிதை சீரியலில் இவர் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த சீரியல் நீண்ட நாட்களாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. ஒரு குறுகிய காலத்தில் இந்த சீரியலை முடித்து விட்டார்கள். விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல்மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை என பல திரைப்படங்களில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் வி ஜே மகேஸ்வரியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார்.

வீட்டில அதுக்குன்னு தனி இடம்..

அண்மையில் கூட இவர் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்தப் பாடல் காட்சியில் அத்துமீறி இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தத்தை தந்ததோடு ரொமான்ஸ் காட்சிகளில் படு மோசமாக நடித்திருந்தது சமூக ஊடகங்களில் பரவியது.

இதனை அடுத்து தற்போது விஜே மகேஸ்வரி தனது ஹோம் டூரில் தனது பிரம்மாண்டமான வீடு முழுவதும் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டு இருப்பதை காட்டி இருக்கிறார்.

இதில் குறிப்பாக இவர் வீட்டில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீனை வளர்த்து வருகிறார். அந்த மீனை வாங்கும் போது அது ஒரு சிறு குஞ்சாகத் தான் இருந்தது.

மேலும் வெறும் ஐம்பதாயிரத்துக்கு வாங்கிய இந்த மீன் தற்போது மூன்று லட்சம் வரை விற்பனையாகும் என்று சொல்லிய அவர் இந்த மீனை விற்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த மீன் அவரது வீட்டின் வாஸ்துவுக்காக வைக்கப்பட்டுள்ளதாம்.

இலட்சத்தில் புரளும் மகேஸ்வரி..

இதெல்லாம் என்ன.. இதை விட ஒரு படி மேலே சென்று அவர் காட்டிய வீட்டுக்குள் இருக்கும் மினி பார் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. யாராக இருந்தாலும் இந்த மிகப்பெரிய பாரை பார்த்து வியப்பின் உச்சிக்கு செல்வார்கள்.

இந்த பார் செட்டப்பில் எல்லா வகையான மது வகைகளும் உள்ளது. என் வீட்டுக்கு வருபவர்களுக்கு இதை பருகக் கொடுப்பேன் என சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த சரக்கை தான் எப்போதும் குடிப்பதில்லை என்றும் எப்போதாவது தோன்றினால் எடுத்துக் குடிப்பேன் என்று கூறி இருக்கக் கூடிய வார்த்தைகள் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் நண்பர்களுக்கு மதுபாட்டி வைக்க இந்த மினிபாரை பயன்படுத்துவதாக சொன்னதோடு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்க்கும் போது சரக்கு பார்ட்டி வைக்கவும் இந்த மினி பாரை பயன்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் அந்த மாதிரி சரக்கு பார்ட்டி நடக்கும் போது மட்டும் என் மகனுக்கு எங்கே அனுமதி இல்லை என்பதை உறுதியாக தெரிவித்த விஜே மகேஸ்வரியின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இதனால் தான் மகேஸ்வரி லட்சத்தில் புரளுகிறாரா? இதுக்குன்னு வீட்டில் தனியாக ஒரு இடமா? அப்படி போடு அருவாள.. என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.