முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் வெளியிட்ட கண்ணீர் தகவல்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையான வித்யா பாலன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துக் கொண்டார் .

குறிப்பாக இவர் திரைப்படங்களில் தனது வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி எதார்த்தமான நடிப்பை காட்டுவதன் மூலமாக ஒட்டு மொத்த இந்தி சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

நடிகை வித்யா பாலன்:

வித்யாபாலனின் நடிப்பு பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும் பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டார் நடிகை வித்யா பாலன்.

முதன்முதலில் 2003ஆம் ஆண்டு பாலோ தேகோ என்ற வங்காளி திரைப்படத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த பரிநீத்தா என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் .

விருதுகளை குவித்த படம்:

இத்திரைப்படத்திற்காக சிறந்த சிறந்த பெண் அறிமுக தோற்றத்திற்கான விருது, பிலிம்பேர் முகத்திற்கான விருது, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது உள்ளிட்டவற்றை அள்ளினார்.

அதை தொடர்ந்து தொடர்ச்சியாக ஹிந்தியில் ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதனிடையே இவர் தமிழில் முதல் முதலில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை வித்யா பாலன் தான் முதல் காதலனால் ஏமாற்றப்பட்டேன் என்று மிகுந்த கவலையோடு பேசி இருக்கிறார் .

முதல் காதல் குறித்து வித்யா பாலன்:

அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அவர் சொன்னதாவது நான் கல்லூரியில் படிக்கும்போதே ஒரு மாணவனை காதலித்து வந்தேன்.

நானும் அந்த மாணவனும் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த போது திடீரென வந்து ஒரு நாள் நான் என்னுடைய பழைய காதலியை சந்தித்தேன். அவள் இப்போது என்னுடன் டேட்டிங் போக விரும்புவதாக என்னிடம் கூறினால் அதனால் நாளைக்கு நான் ஆவலுடன் டேட்டிங் செல்லப் போகிறேன் என்றான்.

இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. ஏண்டா பரதேசி என்னை லவ் பண்ணிட்டு உன்னுடைய எக்ஸ் லவ்வர் ஓட டேட்டிங் போவியா? அப்படியே போயிடு என்று லவ் பிரேக்கப் பண்ணிட்டு அவன கழட்டி விட்டுட்டேன்.

பிறகு நான் யாரையும் காதலிக்கவே இல்லை. என்ன சினிமாவில் என்னுடைய வாழ்க்கையில் வெற்றிகரமாக நான் பயணத்தை செய்து கொண்டு இருந்தேன் என வித்யாபாலன் அந்த பேட்டையில் கூறியதாக பயில்வான் கூறியுள்ளார்.

காதல் தோல்வி:

அதன் பின் வித்யா பாலன் கடந்த 2012 ஆம் ஆண்டு சித்தார்த் ரோய் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரை திருமணம் செய்வதற்கு முன்னதாக பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் சாகித் கபூரை காதலித்து வந்தார்.

அவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி லிவிங் லைஃப் வாழ்ந்து வந்த நடிகை வித்யா பாலனுக்கு இதெல்லாம் சாதாரணமான விஷயம்.

குறிப்பாக பாலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இதெல்லாம் மிகவும் சுலபம்….காதலிப்பது, அவருடன் லிவிங் லைப் வாழ்வது, பின்னர் அவரை பிடிக்கவில்லை என பிரேக்கப் செய்துவிட்டு வேறொருடன் பழகுவது, வேறொருளுடன் காதலித்து திருமணம் செய்வது இதெல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம்.

அதற்கு வித்யா பாலனும் விதிவிலக்கல்ல என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி அதிரவைத்துள்ளார்.