உடலை விக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா.. சதைக்கு தான் காசு.. சொன்ன நடிகை யார் தெரியுமா..?

திரையுலகை பொருத்த வரை பல்வேறு வகையான திரை மறைவு வேலைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் திரை வாய்ப்பை பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மென்ட் நடப்பது பற்றி ஊடகங்களில் அதிக அளவு செய்திகளை படித்து இருப்பீர்கள்.

பொதுவாக அட்ஜெஸ்ட்மெண்டை விரும்பி செய்கின்ற நடிகைகளும் வம்படியாக அதில் மாட்டிக்கொள்ளக் கூடிய நடிகைகளும் சினிமாவில் தன்னை எப்போதும் நிலை நிறுத்த தானாகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்ற நடிகைகளும் உள்ளார்கள்.

உடலை விக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா..

அந்த வகையில் திரை மறைவில் நடக்கின்ற திரை உலக சமாச்சாரங்களை புட்டு, புட்டு வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது இது குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவர் தெலுங்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் மக்களால் விரும்பப்படக்கூடிய நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார். 2011-ஆம் ஆண்டு வெளியான நேனு நன்னா அபடம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அரவிந்த் 2, ஜிந்தகி ஆகிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து 2018 – ஆம் ஆண்டு தனது பயோ பிக் படமான ஸ்ரீ ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்த இவருக்கு 2021 ஆம் ஆண்டு கிளைமாக்ஸ் என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சதைக்கு தான் காசு..

திரைப்படங்களில் நடித்து புகழ் அடைந்த இவர் திரைப்படங்களில் பிரபலமானதை விட மேலாடையை கழற்றி விட்டு நடத்திய போராட்டத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற நடிகைகளின் ஒருவராக மாறினார்.

மேலும் தெலுங்கு நடிகர் சங்கம் மா – வில் இவர் 2019 ஆம் ஆண்டு போராட்டம் செய்ததை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு பலரும் தன்னை கட்டாயப்படுத்தி அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைப்பதாக கூறியதை அடுத்த தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

மேலும் தன்னை அவர்களின் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் திரை பட வாய்ப்பை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பல பிரபலங்களை பற்றி குற்றச்சாட்டுகளை சரமாரியாக வைத்திருந்தார்.

அந்த வகையில் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், நானி மற்றும் பிரபல இயக்குனர்களின் மீது மீடு புகார்களை அளித்த நடிகை தமிழ் சினிமாவில் விஷால், லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் என பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி சுனாமியை ஏற்படுத்தினார்.

சொன்ன நடிகை யார் தெரியுமா..?

இப்படி இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்திய நடிகை யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த நடிகை வேறு யாரும் இல்லை நீங்கள் நினைப்பது போல் நடிகை ஸ்ரீ ரெட்டி தான்.

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்தேன் ஏமாந்தேன் என்பதெல்லாம் பலருக்கும் தெரியும். உடலை விற்பது எனக்கு மட்டும் என்ன சந்தோஷமான விஷயமா? அப்படி எல்லாம் எதுவும் கிடையாது 

திரை உலகில் சதைக்கு தான்  பட வாய்ப்புகள் கிடைக்கிறது. நடிகைகள் என்றாலே கவர்ச்சி என்று ஆகிவிட்டது. எனவே பட வாய்ப்புக்காக நான் என் உடலை விற்றேன். 

ஆனால், எனக்கு சந்தோசம் கிடையாது.. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது.

இதை தவிர எதையும் நான் விருப்பப்பட்டு செய்யவில்லை. என்ன கூறினாலும்.. நானும் ஒரு பெண் தானே.. நான் செய்தது தவறு என்று கூறும் நபர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியவர்கள் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள் என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதை அடுத்து ஸ்ரீ ரெட்டியின் பேச்சானது பரபரப்பாக பேசப்படுகிறது.