ஈரம் சொட்டும் நீச்சல் உடையில் எதிரே நின்ற நயன்தாரா.. அசராமல் அசால்டாக நின்ற டாப் நடிகர்..!

லேடி சூப்பர் ஸ்டார் இன்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார்  சரத்குமார் உடன் இணைந்து நடித்தவர்.

இந்த படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை நயன்தாரா..

நயன்தாரா ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்த இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அண்மையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

எனினும் அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்ற தந்ததோடு மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆகவில்லை.

இதனைத் தொடர்ந்து ஏதாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் தற்போது திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருவதோடு பல தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராகவும் விளங்குகிறார்.

ஈரம் சொட்டும் நீச்சல் உடையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி புதிய உடைகளை உடுத்தி கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார். 

அந்த வகையில் நடிகை நயன்தாரா பில்லா படத்தில் நடித்த போது முதன் முறையாக டூபீஸ் நீச்சல் உடையில் நடித்திருந்தார். அதற்கு முன்பு நீச்சல் உடையில் நடிகை நயன்தாரா எந்த படத்திலும் நடித்தது கிடையாது. 

மேலும் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தயங்கிய படியே நடிகை நயன்தாராவிடம் இந்த உடை உங்களுக்கு செட் ஆகுமா? என்ற ஒரு வித சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகை நயன்தாரா ஏன் என்னால் முடியாதா? என கர்வம் கொண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் விஷ்ணுவர்தன் முன்பு நடிகர் அஜித் முன்பும் வந்து நின்றிருக்கிறார்.

அசராமல் அசால்டாக நின்ற நடிகர்..

இதை பார்த்த விஷ்ணுவர்தன் வாயை பிளந்து இருக்கிறார். ஆனால் நடிகர் அஜித் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் சாதாரணமாக எப்படி இருப்பாரோ அதே போல இருந்திருக்கிறார்.

 இது குறித்து பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்திடமே கேள்வி எழுப்பப்பட்டது. இப்படி முன்னணி நடிகை ஒருவர் திடீரென நீச்சல் உடையில் உங்கள் முன்பு வந்த நிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றியது என கேள்வி எழுப்பி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகர் அஜித் இதில் எனக்கு என்ன தோன்றியது என்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அது அவருடைய தொழில்.. இயக்குனர் என்ன சொல்கிறாரோ.. அதனை அவர் செய்கிறார்..

இதில் என்னுடைய கருத்து என்ன..? நான் நினைக்க என்ன இருக்கிறது..? என புரியவில்லை என பதில் அளித்து இருக்கிறார் அஜித். அஜித்  பேச்சை தற்போது இணையத்தில் வைரலாக இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.