எந்த தண்ணிய சொல்றீங்க.. மேடையிலேயே கூச்சமின்றி பேசிய நடிகை அதிதி ஷங்கர்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை அதிதி ஷங்கர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இவர் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து இருந்தாலும் திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பெற்றோர்களிடம் கூறிய பின் திரைத்துறைக்கு நடிக்க வந்தவர்.

நடிகை அதிதி ஷங்கர்..

இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். அந்த வகையில் தெலுங்கில் காணி படத்தின் ரோமியோ ஜூலியட் பாடலுக்காக அதிதி பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.

மேலும் தமிழ் திரை உலகில் 2022-ஆம் ஆண்டு வெளி வந்த விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறர்.

மேலும் இந்த படத்தில் ஒரு கிராமத்து பெண் போல நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

முதல் படமே இவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை தந்ததை அடைத்து இரண்டாவதாக தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் ஒரு இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு குறிப்பிடத்தக்க ரிச்சை கொடுக்கவில்லை.

மேலும் இவர் நடிக்கின்ற படங்களில் கட்டாயமாக ஒரு பாட்டை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனது முதல் படமான விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை பாடி அசத்தினார். இதனை அடுத்து மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு எனும் பாடலையும் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பவர். அத்துடன் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவார்.

மேலும் சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி தனியார் youtube சேனல்கள் மட்டுமின்றி தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரக்கூடிய அதிதி ஷங்கர் அண்மை பேட்டியில் பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

எந்தத் தண்ணிய சொல்றீங்க..

இதற்கு காரணம் சமீபத்திய பிரஸ் மீட் ஒன்றில் ரிப்போர்டர்களை சந்தித்த இவர் ரிப்போர்ட்டர்களையே கலாய்த்து தள்ளும்படி பேசி இருப்பது தான் அந்த சலசலப்புக்கு காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா.

சாதாரண பிரஸ் மீட்டில் இவர் ரிப்போர்ட்டர்களிடம் பேசு ம்போது ரிப்போர்ட்டர் ஒருவர் தண்ணீர் கேட்க எனக்கும்தான் தண்ணி கிடைக்கல என்று சொல்ல உடனே விவகாரமாக எந்த தண்ணியே சொல்லறீங்க என்று மேடைகளிலேயே கூச்சமின்றி பேசிய அதிதி ஷங்கரின் பேட்டி இப்போது வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இவர் ஏற்கனவே ஜோவியலாக பழகக்கூடிய தன்மை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இப்படி எடக்கு மடக்கான கடி ஜோக்குகளை சொல்லுவார் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

மேடையில் கூச்சமின்றி பேசிய அதிதி..

அந்த வகையில் மேடையிலேயே ரிப்போர்டரை பங்கமாக கலாய்த்து தள்ளிய அதிதி ஷங்கரின் பேச்சானது செம வைப்பாக இணையங்களில் பரவி வருகிறது.
மேலும் இவர் எப்போது தனது அப்பா படத்தில் எப்போது நடிப்பார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் என்னுடைய அப்பாவை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

அவரிடம் அடம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு உரிய நேரம் வரும் போது இணைந்து செயல்படுவோம் என்று ரத்தினச் சுருக்கமாக கூறுகிறார்.

மேலும் இந்தியன் 2 ஆடியோ லான்ச்சில் தான் எந்த தண்ணியே சொல்றீங்க.. என்று பேசி செம வைப்பை செய்த அதிதி ஷங்கரின் பேச்சை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற பேட்டிகளில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.