நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டாங்க இந்த விஷயத்துல.. திருமணம் குறித்த ஓவியா ஓப்பன் டாக்..!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை ஓவியா:

முதன் முதலில் 2019 ஆம் ஆண்டில் களவாணி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .

முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மட்டுமே அல்லாமல் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

குறிப்பாக கனவு கன்னியாக இளம் வட்டத்தினரிடையே வலம் பெறத் தொடங்கினார்.ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்த அந்த ரோலில் பாவாடை தாவணி அணிந்து குடும்ப குத்து விளக்காக நடித்தார் ஓவியா .

இதனாலே அவருக்கு ஏகோபித்த ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். திரைப்படத்துறையில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மாடல் அழகி To ஹீரோயின்:

அதன் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பை கிடைக்க தொடங்கியது . இவர் கேரளாவிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டார்.

அதன் பிறகு சினிமாவில் நடிகையாக ஆன பிறகு சென்னையில் வந்து செட்டில் ஆனார். இதனிடையே தமிழில் மெரினா, மூடர் கூடம் ,யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மேலும் மன்மத அம்பு , முத்துக்கு முத்தாக, கலகலப்பு மதயானை கூட்டம், புலி வால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார் நடிகை ஓவியா.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

ஓவியாவுக்கு இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகினார்கள். முதன் முதலில் இவருக்கு தான் ஆர்மிஸ் உருவாக்கப்பட்டது .

இவரின் நேர்மையான நடவடிக்கைகளையும் உண்மையான பேச்சுகளும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று அவருக்கு ஆதரவாக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள் .

குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி நடந்துக் கொண்ட விதத்தை பார்த்து ஓவியாவுக்கு பல பேர் ஆதரவு கொடுத்து வந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டு இருவரும் மருத்துவ முத்தம் கொடுத்துக் கொண்டதெல்லாம் பெரிய விஷயமாக பேசப்பட்டது .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை ஓவியா நான் இதுவரை நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.

பலபேர் யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டாங்க:

ஆனால் அது எதுவுமே எனக்கு செட்டாகவில்லை. காரணம் அவர்கள் யாரும் என்னுடன் உண்மையாக இருக்கவே இல்லை.

எல்லோரும் ஒரு விஷயத்தில் என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க. குறிப்பாக பல பேர் என்னை பல விஷயத்தில் யூஸ் பண்ணிக்கிட்டு அதன் பிறகு ஏமாற்றிவிட்டு போயிட்டாங்க என்று ஓவியா மிகுந்த எமோஷனலாக பேசியிருக்கிறார்.

33 வயதாகும் நடிகை ஓவியா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது மற்றும் நடிகர் ஆரவ் காதலித்து ஏமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.