4000 கோடி சொத்து.. ஐஸ்வர்யா ராய்.. உலக அழகிக்கே ஊத்திக்கொண்ட காதல்.. நள்ளிரவில் நடந்த கொடுமை..!

1994-இல் உலகழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை இன்று வரை மெயின்டைன் செய்து வருபவர்.

இவரது பூர்வீகம் கர்நாடகாவில் இருக்கும் மங்களூரு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். துளு பேசக்கூடிய பண்டிட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் மும்பைக்கு குடிபெயர்ந்து அங்கிருக்கும் ஆரிய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை கற்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்..

ஹிந்தியில் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் இவர் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பிரம்மாண்டமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் 1999-ஆம் ஆண்டு முதல் ஹிந்தி நடிகர் சல்மான்கான் உடன் டேட்டிங் உறவில் இருந்தார் என்ற பேச்சுக்கள் அடிபட்டது.

மேலும் இது போன்ற கிசுகிசுகளுக்கு முற்றுப்பள்ளி வைக்க கூடிய வகையில் இவர் 2007-ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமானது பண்டிட் குடும்ப முறைப்படியே நடந்தது.

4000 கோடி சொத்து.. ஊற்றிக்கொண்ட காதல்..

இதனை தொடர்ந்து இணையங்களில் தற்போது ஐஸ்வர்யா ராய் குறித்தும் அபிஷேக் பச்சன் குறித்தும் கலவை ரீதியான கருத்துக்கள் தொடர்ந்து உலா வருவதை அடுத்து அவற்றைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் இருவரும் வெளியிடவே இல்லை.

இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் சல்மான் கான் இருவரும் ஒரு காலத்தில் நெருக்கமாக பழகி வந்தனர். ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொள்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருவரும் காதலிக்கிறார்கள்.

அத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியாகின. அப்போதே நான்காயிரம் கோடிகளுக்கு அதிபதியானார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் குறித்து பலரும் அறியாத ரகசியமான தகவல்கள் ஊடகங்களில் வெளியாவதை பார்த்து ஐஸ்வர்யா ராய் கடுப்பாகி இருக்கிறார்.

எப்படி இப்படியான ரகசியங்கள் எல்லாம் வெளியாகிறது என்று கேள்விக்கு விடை தெரியாமல் இருந்திருக்கிறார்.

இப்படியான தகவல்கள் வெளியில் சொல்லக் கூடாத ரகசியங்கள் எல்லாம் சல்மான் கான் மூலமாகத் தான் வெளியே செல்கிறது என்பதை தெரிந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் சல்மான் கான் இடம் சண்டை போட்டு இருக்கிறார்.

நான் உன்னை பிரிகிறேன் உன்னுடன் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியாது.இனி நண்பர்களாக தொடர்ந்து இருக்கலாம் என கூறி தன்னுடைய காதலை முடித்துக் கொண்டிருக்கிறார்.

நள்ளிரவில் நடந்த கொடுமை..

இதனால் கடுப்பான சல்மான் கான் நள்ளிரவு நேரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்க்கு சென்று அவரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

இதனை சுத்தி இருந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் பார்த்ததோடு அனைவரும் வந்து என்ன நடக்கிறது என்று பார்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகும் நடிகை ஐஸ்வர்யா ராய் நான் உங்களுடன் ஒரு தோழியாக தான் பழகி வந்தேன்.

உங்களை நான் காதலிக்கவில்லை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என மறுத்த நடிகை ஐஸ்வர்யா கான் என்று மாறவேண்டிய நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக ஐஸ்வர்யா பச்சனாக மாறினார்.