19 வயசுல கல்யாணம்.. என்ன இவ்ளோ பெருசா இருக்கு.. என்னை விட்ருங்கன்னு கதறினேன்.. ஆனால்.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!

பழம்பெரும் நடிகையான நடிகை லக்ஷ்மி தொலைக்காட்சி தொகுப்பாளராக திகழ்ந்தார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த இவர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில் இருக்கும் விவாதங்களை தொலைக்காட்சிகளில் நடத்தி இருக்கிறார்.

இவர் திரைத்துறையில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையோடு தான் தனது கல்வியை முடித்திருந்தார். எனினும் எதிர்பாராத விதமாக இவர் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை லட்சுமி..

நடிகை லட்சுமியின் பெற்றோர்கள் ஏற்கனவே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியதை அடுத்து இவரும் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் 1970-ஆம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வெற்றி கொடியை நாட்டியவர்.

மேலும் இவரது மலையாள படமான சட்டக்காரி இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்ததோடு 1975-ஆம் ஆண்டு ஜூலி என்ற ஹிந்தி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பையும் பெற்று தந்தது.

இது வரை தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1990-களில் இவருக்கு சினிமா வாய்ப்பு ஹீரோயினியாக நடிக்க குறைந்ததை அடுத்து துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

மேலும் பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் தனது தனி முத்திரையை பதித்த இவர் இதில் தனி மனித அவலங்களையும் சமூகப் பிரச்சனைகளையும் வெளியிடுவார்.

19 வயசுல கல்யாணம்..

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய  நடிகை லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அதில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இதில் அவர் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அதில் ஒன்று அவருடைய திருமணம் மற்றொன்று மலையாள படங்களில் நடிப்பது.இதில் முதலாவதாக திருமணம் குறித்து பேசிய நடிகை லட்சுமி எனக்கு 19 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது உடனே கர்ப்பம் தரித்து விட்டேன்.

மேலும் 20 வயதில் எனக்கு குழந்தை பிறந்து விட்டது முதல் குழந்தை பிறந்த பிறகு எனக்காக பொறுப்புகள் அதிகரித்திருப்பதை நான் உணர்ந்தேன் என பேசிய நடிகை லட்சுமி அடுத்து மலையாள படங்களில் நடிப்பது குறித்தும் மலையாள பட வாய்ப்புகள் கொடுத்தும் பேசி இருந்தார்.

பொதுவாகவே மலையாள பட வாய்ப்புகள் என்றால் நான் சற்று யோசிப்பேன். ஏனென்றால் கேரளாவில் நடிக்க வேண்டும் என்றால் அங்கே உள்ள சாப்பாடு தான் சாப்பிட வேண்டும்.

 

என்ன விட்டுடுங்கன்னு கதறினேன்..

முதல் முறை நான் கேரளாவிற்கு படப்பிடிப்பு சென்று இருந்த பொழுது சாப்பாடு என்று  கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த சாப்பாட்டை பார்த்தபோது ஒவ்வொரு பருக்கையும் பெரிது பெரிதாக இருந்தது. 

இதனை பார்த்து என்ன இவ்வளவு பெருசா இருக்கு..? இதெல்லாம் என்னால் சாப்பிட முடியாது..என்னை விட்ருங்க என கதறினேன்.. ஆனால், இங்கு அனைவரும் இது தான் சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியமானது.. நீங்களும் சாப்பிடலாம்.. என்று கூறினார்கள். 

அந்த படப்பிடிப்பு முடியும் வரை எப்படியோ நாட்களை கடத்தினேன். எப்போடா நம்ம ஊருக்கு போய் நம்ம ஊரு சாப்பாட்டை சாப்பிடுவது என்று இருந்தேன். 

ஆனா லட்சுமி ஓபன் டாக்..

எனவே மலையாள படங்களில் நான் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். அத்துடன் கதைக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தால் மட்டும் அந்த மலையாள படங்களில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறேன் என பேசியிருக்கிறார் லட்சுமி. 

இதனை அடுத்து நடிகை லட்சுமிக்கு 19 வயசில் திருமணம் ஆன விஷயம் பற்றியும் கேரளாவில் இருக்கும் அரிசியின் சைஸ் பற்றியும் ஓப்பனாக பேசிய லட்சுமியின் விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.