ப்ளூ பிலிம் பார்ப்பதற்கு பதிலாக இதை செய்யலாம்.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய நடிகை ஷில்பா மஞ்சுநாத் ரசிகர்களால் அதிகளவு விரும்பப்படும் நடிகையாக திகழ்கிறார். இவர் 2018 – ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த காளி என்ற படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும் தனது முதல் படத்திலிருந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு முங்காரு ஆண் 2 என்ற கன்னட திரைப்படத்தில் ஐஸ்வர்யா கேரக்டரை அற்புதமாக செய்தவர்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்..

நடிகை ஷில்பாவை பொறுத்த வரை 2017-ஆம் ஆண்டு யார் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தான் விஜய் ஆண்டனியோடு இணைந்து பார்வதி கேரக்டரை காளி படத்தில் செய்திருந்தார்.

இதனை அடுத்து மலையாள திரைப்படமான ரோஜாப்பூ என்ற படத்தில் சீரும் சிறப்புமாக நடித்த இவர் மீண்டும் அதே ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டு நீவு கரே மடிடா சுண்டடாரு என்ற கன்னட படத்தில் மீண்டும் தோன்றி தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

தமிழில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்த இவருக்கு 2019-ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ எஸ் ஓ, தேவதாஸ் சகோதரர்கள், ஓணான் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து 2023-ஆம் ஆண்டு வரை திரைப்படத்தில் நடித்த எவர் 2024 சிங்கப் பெண்ணே என்ற படத்தில் நடித்ததை அடுத்து மீண்டும் கன்னட படத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

மேலும் தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் தெலுங்கு படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்தி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

ப்ளூ ஃபிலிம் பார்ப்பதற்கு பதிலா இதை செய்யலாம்..

இப்போது தென்னிந்திய திரைப்படங்களில் முக்கிய நடிகையாக உலா வரும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஹாரிஸ் கல்யாணத்துக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்து ரசிகர்களின் இதய ராணியாக மாறிவிட்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தனது இன்ஸ்டால் பக்கத்தில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் அதிக அளவு பெற்று இருக்கிறார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவரிடம் நீங்கள் ப்ளூ ஃபிலிம் பார்த்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத், ஆம், பார்த்திருக்கிறேன். சிறுவயதில் என்னுடைய தோழிகளுடன் நெட் சென்டருக்கு சென்றேன். அப்போது நாங்கள் எதையோ அழுத்த அந்த வீடியோ வந்து விட்டது. 

எங்களுக்கு என்ன செய்வது..? என்று தெரியவில்லை. உடனடியாக அந்த வீடியோவை ஆஃப் செய்து விட்டு அந்த சென்டரை விட்டு கிளம்பி விட்டோம், அது மோசமான அனுபவமாக அமைந்தது என கூறினார்.

கூச்சம் இல்லாமல் பேசிய நடிகை..

அதன் பிறகு மறுபடியும் எப்போதாவது ப்ளூ பிலிம் பார்த்திருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷில்பா மஞ்சுநாத் எனக்கு அதில் விருப்பமில்லை. 

அப்படியான படங்கள் பார்ப்பதன் மூலமாக நம்முடைய உடலில் தேவைக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நம்முடைய உடலில் தேவைக்கு அதிகமாக ஒரு ஹார்மோன் சுரக்கிறது என்றால் அதனால் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே ப்ளூ பிலிம் பார்ப்பதற்கு பதிலாக உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிஜமாகவே நீங்கள் செய்து விட்டு போய்விடலாம். அந்த படத்தை பார்த்து உங்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தவறான பழக்கங்களில் ஈடுபடுவது போன்றவை உடலுக்கு நல்லது கிடையாது. 

இப்படியான காரணங்களால் நான் அப்படியான படங்களை பார்ப்பதில்லை என கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.