வரலட்சுமி கல்யாணத்தில் தொடையை காட்டி ராதிகா ஆட்டம்..! என்னா எனர்ஜின்னு பாருங்க..!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அவர்கள் குடும்பத்திற்கு பெரிதாக இவர் சினிமாவிற்கு வருவதில் விருப்பமில்லை என்றாலும் கூட வரலட்சுமிக்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் அவர் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வரலட்சுமியின் முகம் பார்ப்பதற்கு ஆண் போல இருப்பதாகவும் அவரது குரலும் கொஞ்சம் ஆண் குரல் போல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் அவருக்கு வரவேற்புகள் குறைய தொடங்கின. ஆனால் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற முடியும் என்பதை காட்டும் வகையில் தார தப்பட்ட திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

பிரபலமான நடிகை:

இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த நிலையில் 38 வயதை கடந்த வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் நிக்கோலை சச்தேவ் என்கிற நபரை காதலித்து வந்தார்.

பல வருடங்களாகவே அவர்களது காதல் சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கோலாகலமாக அவர்களது திருமணம் நடந்தது.

தாய்லாந்தில் உள்ள பாலித்தீவில் இதற்காக பல கோடிகளை செலவு செய்து இந்த திருமணத்தை நடத்தி இருக்கின்றனர். இந்த திருமண நிகழ்வில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமணம் வட இந்திய முறையில் பல நாட்கள் நடந்தது.

சரத்குமார் ராதிகா நடனம்:

இந்த நிலையில் இதில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் நடனம் ஆடியிருந்தது அதிக வரவேற்பை பெற்றது. இந்த வயதிலும் இவ்வளவு ஆற்றலுடன் நடனமாடுகிறார்களே என்று இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர் நெட்டிசன்கள்.

அழகான பெண்களுடன் சேர்ந்து மேடையில் அனைவரையும் கவரும் வகையில் சரத்குமார் நடனமாடி இருந்தார். ஆனால் அவரை விட சிறப்பான நடனத்தை சோலோவாகவே பொன்மகள் வந்தால் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார் ராதிகா.

ராதிகா இப்போது சீரியலில் நடித்து வந்தாலும் கூட கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை விடவும் அதிகமாக பிரபலமாக இருந்தவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு அவருக்கு பெரிய நடிகர்களின் திரைப்படங்களிலேயே வாய்ப்புகள் கிடைத்து வந்தன. அதனால் நடனம் ஆடுவதில் ஏற்கனவே திறன் பெற்றவர்தான் நடிகை ராதிகாவும்.

இந்த நிலையில் அந்த திருமணத்தில் இவர்கள் இருவரும் ஆடிய நடனம் வெகுவாக பேசப்பட்டது மேலும் அதிகமாக இணையதளங்களில் வைரலாகியும் வந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் அவர்களது திருமண நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.