பக்கத்துல குத்த வைத்த முன்னாள் காதலன்.. நயன்தாரா செய்ததை பாருங்க..!

நடிகை நயன்தாரா ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடித்திருந்தாலும் நாள் செல்ல, செல்ல தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளி வந்த ஐயா திரைப்படத்தில் தான் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததோடு ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மனதிம் இடம் பிடித்தார்.

இதை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தனது அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தல அஜித்தோடு இணைந்து பில்லா படத்தில் தனது மிரட்டலான லுக்கில் அனைவரையும் கவர்ந்து ஈர்த்த இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்ததை அடுத்து உச்சகட்ட நடிகையாக மாறிவிட்டார்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பாலிவுட்க்கு என்ட்ரி கொடுத்திருக்கக் கூடிய இவருக்கு அங்கும் சிவப்பு கம்பள மரியாதை தான் கிடைத்துள்ளது.

பக்கத்துல குத்த வைத்த..

இதை தொடர்ந்து பாலிவுட்டிலும் பல பட வாய்ப்புகள் தேடி வருவதாக விஷயங்கள் கசிந்து உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா ஆரம்பத்தில் இருந்தே கிசுகிசுகளுக்கு ஆளாகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகர் சிம்புவோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் அதனை அடுத்து பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

அத்தோடு ஒரு காலகட்டத்தில் நடிகை நயன்தாரா இந்த கிசுகிசுகளுக்கு பயந்து பேட்டிகள் கொடுப்பது, பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து இருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் விஷ்ணுவத்தின் இயக்கத்தில் உருவான நேசிப்பாயா படத்தின் பட விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

மேலும் ஏன் அதிக அளவு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை விமர்சகர் ஒருவர் பகிர்ந்து இணையத்தில் அதனை வைரலாக மாற வைத்து விட்டார்.

இதற்கான காரணத்தை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள் அந்த காரணம் என்ன தெரியுமா?

முன்னால் காதலன் அட ராமா..

விமர்சகர் சொன்ன அந்த காரணம் ஒரு முறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நயன்தாரா சென்றிருக்க அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்திருக்கிறார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவரது முன்னாள் காதலர் சிம்பு அவர் அருகில் வந்து அமர்ந்திருக்கிறார். இது நயன்தாராவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

அத்துடன் நயன்தாரா அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மெசேஜ் செய்து வேறு இடத்தில் சென்று அமர்ந்துள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதை அடுத்து தான் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை நயந்தாரா தவிர்த்து விட்டார்.

அவர் நடிக்கின்ற தயாரிக்கின்ற படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விடாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று என்று சொல்லலாம்.