நெப்போலியன் மகனுக்கு உள்ள பிரச்சனைக்கு..? இந்த நோய் உள்ளவங்க ரொம்ப சீக்கிரமே.. அந்த பொண்ணு.. பிரபல மருத்துவர் தகவல்..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் நெப்போலியன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர்.

பன்முகத் திறமையை கொண்ட இவர் ஒரு நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் அதிபராகவும் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார்.

பிரபல திமுக அமைச்சர் கே என் நேருவின் சொந்தக்காரரான நெப்போலியன் 1991-ஆம் ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் முதல் முதலாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானதை அடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

நெப்போலியன் மகனுக்கு உள்ள பிரச்சனை..

இவரது சிறப்பான நடிப்பை சீவலப்பேரி பாண்டி எஜமான் போன்ற படங்களில் நீங்கள் பார்த்து ரசித்து இருக்கலாம்.

இவர் தன்னுடைய திறமைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு தன் மகனுக்காக அமெரிக்கா சென்று விவசாயம் செய்து மிகப் பெரிய அளவு தொழில் அதிபராக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து இருக்கும் நடிகர் நெப்போலியன் இந்த திருமணத்திற்கான அழைப்பினை முதல் முதலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான் அப்படிப்பட்ட இவரது மகனுக்கு கல்யாணமா? என்ற விஷயம் தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு 25 வயது வரை தற்போது தனுஷ் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் தான் என டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கிறார்.

இந்த நோய் உள்ளவங்க சீக்கிரமே..

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கைக்கு உகந்தவர்கள் அல்ல என்ற அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இதை அறிந்து கொண்டு தான் அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதித்தாரா? என்பது பற்றியும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனுஷ் 25 வயதை கடந்து இருப்பதை அதிசயமான ஒன்று என்பதால் எந்த சமயத்திலும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று டாக்டர் காந்தராஜ் நெப்போலியன் மகன் பற்றி தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார்.

 

மேலும் அந்த நோயின் தன்மையை பற்றி பேசும் போது அது ஒரு பாரம்பரிய நோய் என்பதை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்.

அத்தோடு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள் காலத்தை நிர்ணயித்து சொல்ல முடியாது என்ற பகீர் உண்மையை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் ஜெனிடிக் டிஸ்ஆர்டர் மூலம் ஏற்படக்கூடிய இந்த நோயால் எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். மேலும் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்ற நபராகத்தான் அந்த நபர் விளங்குவார்.

இந்த விஷயம் தெரிந்து அந்த பெண் திருமணம் செய்து கொண்டால் அது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரபல மருத்துவர் சொன்ன தகவல்..

மேலும் அது குறித்த உண்மைகள் அந்த பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரியக்கூடிய பட்சத்தில் எவ்வளவு விவாதம் செய்தாலும் அது வீண்.

அத்துடன் சமூகப் புரட்சியை விரும்பக்கூடிய பெண்களின் வரிசையில் அந்த பெண் இதனை இருக்கலாம் என்பது போன்ற விஷயங்களை பிரபல மருத்துவர் காந்தராஜ் சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த நோய்க்கான சிகிச்சை ஆங்கிலம் மருத்துவத்தில் கிடையாது என்பதையும் ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.

இது குறித்து சிலவற்றை நாம் உறுதியாக சொல்ல முடியாது. அத்தோடு சித்த மருத்துவத்தின் மூலம் எவ்வளவு காலம் இவரது ஆயுள் நீட்டிக்கப்பட்ட இருக்கலாம் என்பதையும் உதாரணத்தோடு சொல்லி இருக்கிறார்.