கடல் கடந்து காதல்.. ஓடி போய் திருமணம்.. 3 குழந்தைகளுக்கு தாய்.. ஜெயில் கொடுமை..இலக்கியா அஞ்சலி யார் தெரியுமா..?

சன் டிவியில் 2022-ஆம் ஆண்டிலிருந்து வெளி வரக்கூடிய சீரியல் இலக்கியா என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த தொடர் ஆனது திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் அற்புதமாக நடித்து வரக் கூடிய அஞ்சலியின் இயற்பெயர் சுஷ்மா சுனில் நாயர் என்பதாகும். இவர் பெங்களூரை சேர்ந்த ஒரு ஃபேஷன் டிசைனர் என்பது பலருக்கும் தெரியாது.

கடல் கடந்து ஓடிப் போய் திருமணம்..

இவர் முதல் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுமங்கலி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் நடித்ததின் மூலம் இவருக்கு அதிகளவு ஃபாலோயர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்.

இதனை அடுத்து இவர் வில்லி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மேலும் இந்த கேரக்டரில் இவர் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

ஒரு மிகச்சிறந்த டிசைனர் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு மேக்கப் போடக் கூடிய வகையில் ஒரு ஒப்பனை கலைஞராகவும் விளங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் கன்னட சீரியல்களிலும் வில்லியாக நடித்திருக்க கூடிய இவர் இலங்கை சென்று படிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு இருந்தார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக லோக்கலில் படித்து படிப்பை முடித்து விட்டார்.

மூன்று குழந்தைகளுக்குத் தாய்..

மேலும் நாயகி சீரியலில் அனன்யா கேரக்டரை செய்ததின் மூலம் அதிகளவு தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்ட இவர் மேலும் இந்த சீரியல்களில் நடிக்கும் போது ஜெயிலுக்கு சென்று வந்த காட்சிகள் எல்லாம் இருந்ததாம். அது இவருக்கு சுத்தமாக பிடிக்க என்று கூறி இருக்கிறார்.

இலக்கியா சீரியலில் வெற்றி நடை போட்டு வரும் இவர் இயல்பு வாழ்க்கையில் மிகவும் சாதாரண பெண் போலத்தான் இருப்பார் என்ற தகவலையும் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இவரைப் பார்க்கும் போது 96 படத்தில் வந்த ஜானு போல இருப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். மேலும் இப்போது சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு இவர் தான் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறாராம்.

அண்மையில் வெளி வந்த பட்ஜெட் குடும்பம் படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த வரும் இவர் ரியல் லைப்பில் கன்ஜூஸ் அதாவது சிக்கனமாக இருப்பவர் என்று சொல்லலாம்.

இலக்கியா அஞ்சலி யார் தெரியுமா?

திருமணம் ஆன இவருக்கு இது வரை குழந்தை இல்லை என்ற தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டியவர்கள் ஒரு வேளை பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் ஓடி சென்று கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தாராம்.

 

இவரின் காதல் திருமணம் 2021 ஊரடங்கு காலத்தில் தான் நடந்துள்ளது. மேலும் அவரது கணவர் துபாயில் இருந்த சமயத்தில் மூன்று முறை பொய் கல்யாணம் ஆகாத சமயத்தில் தன் காதலை பார்க்க சென்று இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது வைரலாக பரவி வருவதோடு கடல் கடந்து சென்று தன் காதலனை பார்க்க போன விஷயம் மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விசயமும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.